ETV Bharat / city

'தலைக்கு தில்ல பாத்தியா' - மூங்கில் கிளையை வளைத்து சாலையின் நடுவே நின்ற யானை

author img

By

Published : Apr 8, 2021, 11:21 AM IST

Updated : Apr 8, 2021, 11:42 AM IST

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், யானை ஒன்று சாலையின் நடுவே நின்றபடி மூங்கில் கிளையை வளைத்துச் சாப்பிடும் காணொலி வெளியாகியுள்ளது.

மூங்கில் கிளையை வளைத்து நடுரோட்டில் நின்ற யானை
மூங்கில் கிளையை வளைத்து நடுரோட்டில் நின்ற யானை

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், திம்பம் அருகே சீவக்காய் பள்ளம் என்ற இடத்தில் யானை ஒன்று சாலையின் நடுவே நின்றபடி மூங்கில் கிளையை தனது தும்பிக்கையால் வளைத்துச் சாப்பிடும் காணொலி வெளியாகியுள்ளது.

சுமார் அரைமணி நேரமாகச் சாலையின் நடுவே நின்றிருந்த அந்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியில் சென்ற ஒருவர் இதைக் காணொலியாகத் தனது செல்போனில் பதிவுசெய்தார்.

பின்னர் இந்தத் தகவலறிந்து ஆசனூர் வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று யானையை விரட்டினர்.

மூங்கில் கிளையை வளைத்து சாலையின் நடுவே நின்ற யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அண்மைக்காலமாகவே மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் உணவு, நீர் இன்றி சாலைப் பகுதிகளில் நடமாடிவருகின்றன.

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், திம்பம் அருகே சீவக்காய் பள்ளம் என்ற இடத்தில் யானை ஒன்று சாலையின் நடுவே நின்றபடி மூங்கில் கிளையை தனது தும்பிக்கையால் வளைத்துச் சாப்பிடும் காணொலி வெளியாகியுள்ளது.

சுமார் அரைமணி நேரமாகச் சாலையின் நடுவே நின்றிருந்த அந்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியில் சென்ற ஒருவர் இதைக் காணொலியாகத் தனது செல்போனில் பதிவுசெய்தார்.

பின்னர் இந்தத் தகவலறிந்து ஆசனூர் வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று யானையை விரட்டினர்.

மூங்கில் கிளையை வளைத்து சாலையின் நடுவே நின்ற யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அண்மைக்காலமாகவே மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் உணவு, நீர் இன்றி சாலைப் பகுதிகளில் நடமாடிவருகின்றன.

Last Updated : Apr 8, 2021, 11:42 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.