ETV Bharat / city

நோய் தாக்கி சின்னவெங்காயம் பாதிப்பு - விவசாயிகள் கவலை

author img

By

Published : Dec 7, 2019, 10:54 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் பெய்த தொடர்மழையால் அங்கு பயிரிடப்பட்ட சின்னவெங்காயம் நோய் தாக்கி அழுகியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Disease of onion
Disease of onion

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரும்பள்ளம் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ராகி, சோளம், வெங்காயம் ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு குறுகிய கால பயிரான சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

மூன்று மாதப்பயிரான வெங்காயம், ஏக்கர் ஒன்றுக்கு நான்கு டன் வரை மகசூல் கிடைக்கும். மேலும், வெங்காயம் விலை அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் வரை விலை போவதால் விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருந்தனர்.

Disease of onion

ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெங்காயப்பயிரில் தண்ணீர் சூழந்ததால், அழுகல் நோய் தாக்கி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் செடியிலேயே சின்னவெங்காயம் அழுகியதால், நான்கு டன் மகசூல் கிடைப்பதற்கு பதிலாக ஒரு டன் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்காயத்துக்கு அதிக விலை கிடைக்கும்போது நோய் தாக்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரும்பள்ளம் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ராகி, சோளம், வெங்காயம் ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு குறுகிய கால பயிரான சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

மூன்று மாதப்பயிரான வெங்காயம், ஏக்கர் ஒன்றுக்கு நான்கு டன் வரை மகசூல் கிடைக்கும். மேலும், வெங்காயம் விலை அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் வரை விலை போவதால் விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருந்தனர்.

Disease of onion

ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெங்காயப்பயிரில் தண்ணீர் சூழந்ததால், அழுகல் நோய் தாக்கி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் செடியிலேயே சின்னவெங்காயம் அழுகியதால், நான்கு டன் மகசூல் கிடைப்பதற்கு பதிலாக ஒரு டன் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்காயத்துக்கு அதிக விலை கிடைக்கும்போது நோய் தாக்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Intro:Body:tn_erd_01_sathy_onion_harvest_vis_tn10009

விலை கிடக்கும்போது
தொடர்மழையால் சின்னவெங்காயப்பயிர் நோய் தாக்கி மகசூல் பாதிப்பு

சத்தியமங்கலம் வட்டாரத்தில் பெய்த தொடர்மழையால் நோய் தாக்கியதில் சின்ன வெங்காயசாகுபடி பாதிக்கப்பட்டது. அதிக விலைகிடைக்கும்போது நோய் தாக்கியதில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் அடுத்த பெரும்பள்ளம் அணை நீர்த்தேக்கப்பகுதியில் விவசாயிகள் ராகி, சோளம் மற்றும் வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். இங்கு குறுகிய கால பயிரான சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சில நாள்களாக பெய்த மழையால் வெங்காயப்பயிரில் நீரில் சூழந்ததால் அழுகல் நோய் தாக்கி வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டது. மூன்று மாதப்பயிரான வெங்காயம் ஏக்கர் ஒன்று 4 டன் வரை மகசூல் கிடைககும்.தற்போது வெங்காயம் விலை அதிகபட்சமாக கிலோ ரூ.150 வரை விலை போனதால் விவசாயிகள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்ததனர். தற்போது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சின்னவெங்காயப்பயிரில் நீர் சூழ்ந்து அழுகல் நோய் ஏற்பட்டது.இதனால் செடியிலேயே சின்னவெங்காயம் அழுகியதால் 4 டன் மகசூல் கிடைப்பதற்கு பதிலாக 1 டன் மட்டுமே கிடைத்துள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு நல்ல விலை கிடைக்கும்போது நோய் தாக்கியதில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.