ETV Bharat / city

சிக்கோலா அணை நிரம்பியது - உபரிநீர் முழுவதுமாக வெளியேற்றம்!

author img

By

Published : Sep 5, 2022, 6:35 PM IST

தாளவாடி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள சிக்கோலா அணை நிரம்பியது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் தாளவாடி மலைப்பகுதி அமைந்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தாளவாடி மலைப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சிக்கோலா அணைக்கு சென்று சேருகிறது.

சிக்கோலா அணை

சிக்கோலா அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே, உபரி நீராக அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை 2000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடர்மழை காரணமாக தக்காளி விலை மீண்டும் உயர்வு!

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் தாளவாடி மலைப்பகுதி அமைந்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தாளவாடி மலைப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சிக்கோலா அணைக்கு சென்று சேருகிறது.

சிக்கோலா அணை

சிக்கோலா அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே, உபரி நீராக அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை 2000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடர்மழை காரணமாக தக்காளி விலை மீண்டும் உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.