ETV Bharat / city

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாள் முடிவு?

author img

By

Published : Nov 10, 2020, 12:13 PM IST

Updated : Nov 10, 2020, 12:28 PM IST

ஈரோடு: பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், நாளை மறுநாள் ஆலோசித்து முதலமைச்சர் முடிவு அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

reopen
reopen

கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்துள்ள சிறுவலூர் மற்றும் வேட்டைகாரன்கோவில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ 16,300 பேர் நீட் பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாள் முடிவு?

பள்ளிச்சீருடைகள், காலணிகள் தயாராக உள்ளன. விரைவில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 45% பெற்றோர் மட்டுமே பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்பு முகாமில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர். நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் “ என்றார்.

இதையும் படிங்க: நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்!

கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்துள்ள சிறுவலூர் மற்றும் வேட்டைகாரன்கோவில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ 16,300 பேர் நீட் பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாள் முடிவு?

பள்ளிச்சீருடைகள், காலணிகள் தயாராக உள்ளன. விரைவில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 45% பெற்றோர் மட்டுமே பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்பு முகாமில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர். நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் “ என்றார்.

இதையும் படிங்க: நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்!

Last Updated : Nov 10, 2020, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.