ETV Bharat / city

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

author img

By

Published : Jan 6, 2022, 1:52 PM IST

சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே புதுச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவர் உணவகம் நடத்தி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுமியை மீட்க புதுச்சேரிக்கு சென்ற காவல் துறையினர், அந்நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர்; 20 நாட்களாகத் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி சிக்கியது எப்படி?

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே புதுச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவர் உணவகம் நடத்தி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுமியை மீட்க புதுச்சேரிக்கு சென்ற காவல் துறையினர், அந்நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர்; 20 நாட்களாகத் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.