ETV Bharat / city

கோவை அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பழங்குடி மக்கள் - உதவி செய்யமுன்வருமா அரசு? - valparai tribal people wants basic needs

கோவை: மின்னுற்பத்தி நடக்கிற பகுதியிலேயே வாழ்கின்ற பழங்குடி மக்களுக்கு மின்வசதி மறுக்கப்படும் கொடுமை இங்குதான் நிகழ்கிறது என வெள்ளிமுடி பழங்குடி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

tribal people
author img

By

Published : Sep 12, 2019, 8:57 PM IST

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளிமுடி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக அக்கிராமத்திற்குச் செல்கிற அரசுப்பேருந்து செல்லாமல் காடம்பாறை ஈபி கோட்டர்ஸ் வரை சென்று அங்கிருந்து திரும்புகிறது. இதனால் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் காலையிலும் இரவிலும் வனத்திற்குள் நடந்து செல்கிற அவலநிலை நீடிக்கிறது.

இது மட்டுமில்லாமல் கடந்த இரண்டாண்டு காலமாக முதியோர் உதவித்தொகை இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தையும் அவர்கள் கூறியுள்ளார்கள். இரவு நேரங்களில் சோலார் மின்விளக்கு எரியாததால், கிராமமே இருளில் மூழ்கிக்கிடக்கிறது .

பழங்குடியின மக்கள் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு அளித்த பிரத்யேகப்பேட்டி..!

இதேஇடத்தில்தான் காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரம் பலநூறு கிலோமீட்டர் தாண்டி, கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மின்னுற்பத்தி நடக்கிற பகுதியிலேயே வாழ்கின்ற பழங்குடி மக்களுக்கு மின்வசதி மறுக்கப்படும் கொடுமை இங்குதான் நிகழ்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கு வாழ்கின்ற பழங்குடி மக்கள் தங்களுடைய வாழ்விடத்தை விட்டு வெளியேறும் நோக்கில், அடிப்படை வசதிகள் செய்துதர மறுக்கும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பழங்குடி மக்கள் கடுமையாக கண்டிக்கின்றனர். தேர்தலின்போது அள்ளி வீசுகிற வாக்குறுதிகளில் அடிப்படை வசதி, மருத்துவ வசதி ஆகியவற்றையாவது செய்து தருவார்களா? என்ற ஏக்கத்தோடு இம்மக்கள் காத்திருக்கின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளிமுடி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக அக்கிராமத்திற்குச் செல்கிற அரசுப்பேருந்து செல்லாமல் காடம்பாறை ஈபி கோட்டர்ஸ் வரை சென்று அங்கிருந்து திரும்புகிறது. இதனால் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் காலையிலும் இரவிலும் வனத்திற்குள் நடந்து செல்கிற அவலநிலை நீடிக்கிறது.

இது மட்டுமில்லாமல் கடந்த இரண்டாண்டு காலமாக முதியோர் உதவித்தொகை இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தையும் அவர்கள் கூறியுள்ளார்கள். இரவு நேரங்களில் சோலார் மின்விளக்கு எரியாததால், கிராமமே இருளில் மூழ்கிக்கிடக்கிறது .

பழங்குடியின மக்கள் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு அளித்த பிரத்யேகப்பேட்டி..!

இதேஇடத்தில்தான் காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரம் பலநூறு கிலோமீட்டர் தாண்டி, கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மின்னுற்பத்தி நடக்கிற பகுதியிலேயே வாழ்கின்ற பழங்குடி மக்களுக்கு மின்வசதி மறுக்கப்படும் கொடுமை இங்குதான் நிகழ்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கு வாழ்கின்ற பழங்குடி மக்கள் தங்களுடைய வாழ்விடத்தை விட்டு வெளியேறும் நோக்கில், அடிப்படை வசதிகள் செய்துதர மறுக்கும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பழங்குடி மக்கள் கடுமையாக கண்டிக்கின்றனர். தேர்தலின்போது அள்ளி வீசுகிற வாக்குறுதிகளில் அடிப்படை வசதி, மருத்துவ வசதி ஆகியவற்றையாவது செய்து தருவார்களா? என்ற ஏக்கத்தோடு இம்மக்கள் காத்திருக்கின்றனர்.

Intro:valpariBody:valpariConclusion:வால்பாறை அருகில் உள்ள வெள்ளி முடி மழை வாழ் மக்கள் ஆறுமாதமாக அரசு பேருந்து வருவது இல்லை எனவும் காய்ச்சலால் அவதிபடுவதாகவும் மருத்துவ முகாம் நடத்த அரசு கோரிக்கை.வால்பாறை-12 கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்தில் உட்பட்ட வெள்ளி காடம்பாறை பழங்குடிமக்கள் செட்டில்மென்ட் ஆகும் கடந்த ஆறு மாத காலமாக கிராமத்திற்கு செல்கிற அரசு பேருந்து செல்லாமல் காடம்பாறை ஈபி கோட்டர்ஸ் வரை சென்று அங்கிருந்து திரும்புகிறது இதனால் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் காலையிலும் இரவிலும் வனத்திற்குள் நடந்தே வந்து செல்கிற நிலை நீடிக்கிறது அதோடு மட்டுமல்ல கடந்த இரண்டு ஆண்டு காலமாக முதியோர் உதவித்தொகை இம்மக்களுக்கு கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தையும் இம்மக்கள் தெரியப் படுத்துகிறார்கள் இரவு நேரங்களில் சோலார் மின்விளக்கு தெரியாததால் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது இதே இடத்தில்தான் காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து பலநூறு கிலோமீட்டர் தாண்டி இங்கு உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது , மின்னுற்பத்தி நடக்கிற பகுதியிலேயே வாழுகிற பழங்குடி மக்களுக்கு மின்வசதி மறுக்கப்படுவதும் கொடுமைதான் என்பதை இங்குள்ள மக்கள்சுட்டிக்காட்டுகின்றனர், இங்கு வாழுகிற பழங்குடி மக்கள் தங்களுடைய வாழ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கின்ற அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர மறுக்கிற வனத்துறை மற்றும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கின்றனர்.தேர்தலின்போது அள்ளி வீசுகிற வாக்குறுதிகள் சிலவற்றையாவது இம்மக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அடிப்படை வசதி, மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என ஏக்கத்தோடு மக்கள் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்திருக்கிறார்கள்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.