ETV Bharat / city

கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி

author img

By

Published : Nov 16, 2021, 5:33 PM IST

கோயம்புத்தூரில் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்த 13 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி
கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மழைக்கால நோய்களான டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஆகியவற்றின் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவையில் சளி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண் ஒருவருக்கும், பீளமேட்டைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவருக்கும் மருத்துவ பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ள மருத்துவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அறிவுறுத்தும் மாநகராட்சி நிர்வாகம்

இதனிடையே பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: மழைக் காலத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு - ராதாகிருஷ்ணன்

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மழைக்கால நோய்களான டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஆகியவற்றின் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவையில் சளி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண் ஒருவருக்கும், பீளமேட்டைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவருக்கும் மருத்துவ பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ள மருத்துவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அறிவுறுத்தும் மாநகராட்சி நிர்வாகம்

இதனிடையே பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: மழைக் காலத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு - ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.