ETV Bharat / city

வேளாண் பட்ஜெட்: தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் வரவேற்பு

author img

By

Published : Mar 20, 2022, 2:17 PM IST

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி அளித்துள்ள பேட்டியை இங்கு காணலாம்.

சு.பழனிச்சாமி
சு.பழனிச்சாமி

கோவை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (மார்ச் 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேட்டியளித்துள்ளார்.

அதில், "அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, தமிழ்நாட்டிலுள்ள படித்த வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு 200 பேருக்கு ரூ.1 லட்சம் வீதம் ஊக்கதொகையாக வழங்குவதாகவும், வேளாண்பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேளாண்சார் கடன் வழங்குவதாக எடுத்துள்ள முடிவு வரவேற்புக்குரியது. கிராமப்புற இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

தனிபட்ஜெட்

விவசாயத்துக்கு தனிபட்ஜெட் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி 33 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண் பட்ஜெட்டிற்கு ஒதுக்கி இருப்பதை வரவேற்புக்குரியது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க தனி மண்டலங்கள், தேனீ வளர்ப்பு, பனை வளர்ப்பு , பருப்பு மையம், உணவு பூங்கா போன்ற விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றி நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது, உழவர் சந்தைகள் மாலை நேரங்களில் சிறுதானியங்கள் விற்பனைக்கு அனுமதித்து இருப்பதும் வரவேற்கதக்கது.

அதே வேளையில், கோவை மாவட்டத்தை மையப்படுத்தி தென்னை, கருவேப்பிலை விவசாயிகள் இருந்து வரும் நிலையில், தென்னை சார்ந்து பல்லாயிரம் கோடி மதிப்பினால 33 மதிப்பு கூட்டு பொருள்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் இவற்றுக்கு பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி பேட்டி

அதேபோல, பாக்கு விவசாயம் தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை உற்பத்தி அதிகம் இருக்கும் நிலையில், இதுகுறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை.

கால்நடை வளர்ப்புக்கு நிதியில்லை

வனவிலங்குளால் விவசாயிகளுக்கு ஏற்படும் உயிர் சேதம், பயிர்சேதம் குறித்தும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அரசு இவற்றை வருங்காலங்களில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதேபோல், கால்நடை வளர்ப்பிற்கும் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை. அதற்கு, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சூரியகாந்தி வித்துகளை உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது.

ரூ.1 லட்சம் கடன் தொகை

கரும்பு விவசாயிகளுக்குத் தனியார் ஆலைகள் பல ஆயிரம் கோடி நிலுவையில் இருப்பதை வாங்கி கொடுத்தாலே போதுமானது. கோவை, தேனி, கன்னியாகுமரி பகுதியில் வேளாண் வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதன் மூலம் அவர்களுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வேளாண்மை பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடன் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. கிராமப்புற பட்டதாரி இளைஞர்களின் செயல்திறனை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு இயற்கை விவசாயத்தில் திறம்பட விளங்கும் விவசாயிகளுக்குப் பாராட்டு பரிசு வழங்குவது என்பது விவசாயத்தை ஊக்குவிக்கும் செயலாகப் பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

கோவை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (மார்ச் 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேட்டியளித்துள்ளார்.

அதில், "அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, தமிழ்நாட்டிலுள்ள படித்த வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு 200 பேருக்கு ரூ.1 லட்சம் வீதம் ஊக்கதொகையாக வழங்குவதாகவும், வேளாண்பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேளாண்சார் கடன் வழங்குவதாக எடுத்துள்ள முடிவு வரவேற்புக்குரியது. கிராமப்புற இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

தனிபட்ஜெட்

விவசாயத்துக்கு தனிபட்ஜெட் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி 33 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண் பட்ஜெட்டிற்கு ஒதுக்கி இருப்பதை வரவேற்புக்குரியது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க தனி மண்டலங்கள், தேனீ வளர்ப்பு, பனை வளர்ப்பு , பருப்பு மையம், உணவு பூங்கா போன்ற விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றி நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது, உழவர் சந்தைகள் மாலை நேரங்களில் சிறுதானியங்கள் விற்பனைக்கு அனுமதித்து இருப்பதும் வரவேற்கதக்கது.

அதே வேளையில், கோவை மாவட்டத்தை மையப்படுத்தி தென்னை, கருவேப்பிலை விவசாயிகள் இருந்து வரும் நிலையில், தென்னை சார்ந்து பல்லாயிரம் கோடி மதிப்பினால 33 மதிப்பு கூட்டு பொருள்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் இவற்றுக்கு பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி பேட்டி

அதேபோல, பாக்கு விவசாயம் தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை உற்பத்தி அதிகம் இருக்கும் நிலையில், இதுகுறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை.

கால்நடை வளர்ப்புக்கு நிதியில்லை

வனவிலங்குளால் விவசாயிகளுக்கு ஏற்படும் உயிர் சேதம், பயிர்சேதம் குறித்தும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அரசு இவற்றை வருங்காலங்களில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதேபோல், கால்நடை வளர்ப்பிற்கும் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை. அதற்கு, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சூரியகாந்தி வித்துகளை உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது.

ரூ.1 லட்சம் கடன் தொகை

கரும்பு விவசாயிகளுக்குத் தனியார் ஆலைகள் பல ஆயிரம் கோடி நிலுவையில் இருப்பதை வாங்கி கொடுத்தாலே போதுமானது. கோவை, தேனி, கன்னியாகுமரி பகுதியில் வேளாண் வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதன் மூலம் அவர்களுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வேளாண்மை பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடன் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. கிராமப்புற பட்டதாரி இளைஞர்களின் செயல்திறனை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு இயற்கை விவசாயத்தில் திறம்பட விளங்கும் விவசாயிகளுக்குப் பாராட்டு பரிசு வழங்குவது என்பது விவசாயத்தை ஊக்குவிக்கும் செயலாகப் பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.