ETV Bharat / city

உறுதிமொழிகளை அள்ளி வீசிய பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர்!

author img

By

Published : Mar 31, 2019, 9:31 AM IST

கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அதிமுக வேட்பாளர் சி மகேந்திரன்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பாளையம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போதுப் பேசிய அவர், அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 5 ஆண்டுகளாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது 5000 கோடி அளவிலான பொள்ளாச்சி - கோவை இடையே நான்கு வழிச்சாலை, கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், ஈச்சனாரி போன்ற பகுதிகளில் மேம்பாலம், 54 ரூபாய் இருந்த கொப்பரைத் தேங்காய் விலையை 95 ரூபாய்க்கு உயர்த்தியது, ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்தக் குழு அமைத்து ஆய்வு நடத்தியது போன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம், என்றார்.

அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் பரப்புரை

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பாளையம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போதுப் பேசிய அவர், அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 5 ஆண்டுகளாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது 5000 கோடி அளவிலான பொள்ளாச்சி - கோவை இடையே நான்கு வழிச்சாலை, கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், ஈச்சனாரி போன்ற பகுதிகளில் மேம்பாலம், 54 ரூபாய் இருந்த கொப்பரைத் தேங்காய் விலையை 95 ரூபாய்க்கு உயர்த்தியது, ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்தக் குழு அமைத்து ஆய்வு நடத்தியது போன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம், என்றார்.

அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் பரப்புரை
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட 60 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு- தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கொப்பரை விலை கிலோ ஒன்றுக்கு ரூ 140 விலையை பெற்றுத்தர  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி 

பொள்ளாச்சி -மார்ச் 30 
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி மகேந்திரன் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பாளையம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, கோதவாடி, தாமரைக்குளம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் மற்றும் கூட்டணிக் கட்சியான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார், வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் மகேந்திரனுக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர், இதைத்தொடர்ந்து வாக்கு சேகரித்து பேசிய,அதிமுக வேட்பாளர் மகேந்திரன், 5 ஆண்டுகளாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது 5000 கோடி அளவிலான பொள்ளாச்சி கோவை  இடையே நான்கு வழிச்சாலை ஏற்படுத்தியது, கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், ஈச்சனாரி போன்ற பகுதிகளில் மேம் பாலம் அமைத்தது, 54 ரூபாய் இருந்த கொப்பரை விலையை 95 ரூபாய் விலையைப் பெற்றுக் கொடுத்தது, ஆனைமலை நல்லாறு திட்டத்திற்கு செயல்படுத்த குழு அமைத்து ஆய்வு நடத்தியது,
 போன்ற மக்களின் பல திட்டங்களை செயல்படுத்திய தாகவும், மேலும் தன்னை வெற்றி பெறச் செய்தார் தென்னை விவசாயிகளின் கோரிக்கையான கொப்பரை விலை 140 ரூபாய் விலையை பெற்றுத் தருவதாகும், ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும் என்றும் வாக்கு சேகரிக்கும் போது அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரன் உறுதியளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.