ETV Bharat / city

என்னது கடன் குடுக்கமாட்டியா? வங்கியினுள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர்! சிசிடிவி காட்சிகள்... - வங்கியினுள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர்

கோயம்புத்தூர்: கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கி மேலாளர், ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

man entered canara bank manager room with gun
man entered canara bank manager room with gun
author img

By

Published : Dec 4, 2019, 12:03 PM IST

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் நேற்று துப்பாக்கி, கத்தி ஆகியவற்றுடன் நுழைந்து ஊழியர்கள் மீது வெற்றிவேலன் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார். கனரா வங்கியில் கடன் கொடுக்க மறுத்ததால் ஆவேசமடைந்து இந்த வெறிச்செயலில் வெற்றி வேலன் ஈடுப்பட்டிருக்கிறார்.

இடைத்தரகர் குணபாலன் என்பவர் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இடைத்தரகர் குணபாலனும், கனரா வங்கியின் தலைமை மேலாளர் சந்திரசேகரும் பேசிக்கொண்டு இருந்த போது தான், அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த வெற்றிவேலன், இடைத்தரகர், வங்கி மேலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

''காவலன் செயலி''யை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்: டிஜிபி !

மேலும், இத்தாக்குதலில் சிலருக்கு காயம் ஏற்ப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் சந்திரசேகர் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் வெற்றிவேலனை கைதுசெய்த காவல் துறையினர், கொலைமிரட்டல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியினுள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர்! சிசிடிவி காட்சிகள்...

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் நேற்று துப்பாக்கி, கத்தி ஆகியவற்றுடன் நுழைந்து ஊழியர்கள் மீது வெற்றிவேலன் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார். கனரா வங்கியில் கடன் கொடுக்க மறுத்ததால் ஆவேசமடைந்து இந்த வெறிச்செயலில் வெற்றி வேலன் ஈடுப்பட்டிருக்கிறார்.

இடைத்தரகர் குணபாலன் என்பவர் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இடைத்தரகர் குணபாலனும், கனரா வங்கியின் தலைமை மேலாளர் சந்திரசேகரும் பேசிக்கொண்டு இருந்த போது தான், அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த வெற்றிவேலன், இடைத்தரகர், வங்கி மேலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

''காவலன் செயலி''யை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்: டிஜிபி !

மேலும், இத்தாக்குதலில் சிலருக்கு காயம் ஏற்ப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் சந்திரசேகர் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் வெற்றிவேலனை கைதுசெய்த காவல் துறையினர், கொலைமிரட்டல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியினுள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர்! சிசிடிவி காட்சிகள்...
Intro:Body:

கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா  வங்கியில் நேற்று துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து ஊழியர்கள் மீது வெற்றிவேலன் என்பவர் தாக்குதல் 



கனரா வங்கியில் லோன் கொடுக்க மறுத்ததால் ஆவேசமடைந்து வெறிச்செயல்



இடைதரகர் குணபாலன் என்பவர்  லோன் வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் பணம் வாங்கி கொண்டு வெற்றிவேலனுக்கு  லோன் பெற்றுதர வில்லை 



இடைதரகர்  குணபாலன் தலைமை மேலாளர் சந்திரசேகர் பேசிக்கொண்டு இருந்த போது அறைக்குள் துப்பாக்கியுடன்  நுழைந்த வெற்றிவேலன் இடைத்தரகர்  குணபாலன் மீது  தாக்குதல்



தடுக்க சென்ற வங்கி தலைமை மேலாளர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்கள் மீது சிறிய கத்தியால் தாக்கியதில் அவர்களுக்கு  காயம் 



கனரா வங்கி முதன்மை மேலாளர்  சந்திரசேகர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார்



புகாரின் பேரில் வெற்றிவேலனை  காவல் துறையினர் கைது செய்து கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு விசாரணை


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.