ETV Bharat / city

கடத்தப்பட்ட குழந்தை; 24 மணிநேரத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு - போலீசாருக்கு குவியும் பாராட்டு!

author img

By

Published : Jul 4, 2022, 1:00 PM IST

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு, எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

குழந்தை
குழந்தை

கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குமரன் நகரைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் கடந்த 5 தினங்களுக்கு முன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு (ஜூன் 30) பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள் இருவரையும் டிஸ்சார்ஜ் செய்ய இருந்தனர். இந்நிலையில் நேற்று (3) அதிகாலை 4 மணிக்கு திவ்யபாரதி அசந்து தூங்கி கண்விழித்து பார்த்தபோது, குழந்தையை காணாமல் திடுக்கிட்டார்.

உடனடியாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் கண்காணிக்கப்பட்டன. அதில் கல்லூரி மாணவிகள் போல வந்த, 2 பெண்கள் குழந்தையை கட்டப்பை ஒன்றில் வைத்து எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் கோவை செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன. மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், குழந்தையைத் தேடி கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து காவல் துறையினரின் தீவிர தேடுதலால் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண்ணையும் கைது செய்த போலீசார் மற்றொருவரையும் தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தையை இன்று (ஜூலை 4) அதிகாலை 4 மணிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட தாய் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறும்போது, 'நேற்று அதிகாலை 4 மணிக்கு குழந்தை காணாமல் போனதாக தகவல் வெளியானது. உடனடியாக, குழந்தையைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

இதில், குழந்தை இருக்கும் இடம் தெரியவந்ததை அடுத்து, மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு சிசிடிவி கேமரா காட்சிகளும் மிக உதவியாக இருந்தன. எனவே, அனைவரும் தங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும்' எனக் கூறினார்.

மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் பேட்டி

மேலும், நேற்று அதிகாலை 4 மணிக்கு கடத்திய குழந்தை இன்று அதிகாலை 4 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது; இதற்காக தீவிரமாகப் பணியாற்றிய போலீசாரின் பணி பாராட்டுகளைத் தெரிவிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

குழந்தை காணாமல் போன சம்பவத்தால் பரபரப்பாக காணப்பட்ட மருத்துவமனை வளாகம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதையும் படிங்க: குழந்தை கடத்தல் - பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குமரன் நகரைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் கடந்த 5 தினங்களுக்கு முன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு (ஜூன் 30) பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள் இருவரையும் டிஸ்சார்ஜ் செய்ய இருந்தனர். இந்நிலையில் நேற்று (3) அதிகாலை 4 மணிக்கு திவ்யபாரதி அசந்து தூங்கி கண்விழித்து பார்த்தபோது, குழந்தையை காணாமல் திடுக்கிட்டார்.

உடனடியாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் கண்காணிக்கப்பட்டன. அதில் கல்லூரி மாணவிகள் போல வந்த, 2 பெண்கள் குழந்தையை கட்டப்பை ஒன்றில் வைத்து எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் கோவை செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன. மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், குழந்தையைத் தேடி கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து காவல் துறையினரின் தீவிர தேடுதலால் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண்ணையும் கைது செய்த போலீசார் மற்றொருவரையும் தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தையை இன்று (ஜூலை 4) அதிகாலை 4 மணிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட தாய் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறும்போது, 'நேற்று அதிகாலை 4 மணிக்கு குழந்தை காணாமல் போனதாக தகவல் வெளியானது. உடனடியாக, குழந்தையைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

இதில், குழந்தை இருக்கும் இடம் தெரியவந்ததை அடுத்து, மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு சிசிடிவி கேமரா காட்சிகளும் மிக உதவியாக இருந்தன. எனவே, அனைவரும் தங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும்' எனக் கூறினார்.

மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் பேட்டி

மேலும், நேற்று அதிகாலை 4 மணிக்கு கடத்திய குழந்தை இன்று அதிகாலை 4 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது; இதற்காக தீவிரமாகப் பணியாற்றிய போலீசாரின் பணி பாராட்டுகளைத் தெரிவிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

குழந்தை காணாமல் போன சம்பவத்தால் பரபரப்பாக காணப்பட்ட மருத்துவமனை வளாகம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதையும் படிங்க: குழந்தை கடத்தல் - பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.