ETV Bharat / city

ரூ.33 லட்சம் கோழிப் பண்ணை மோசடி- நால்வருக்கு மூன்றாண்டு சிறை

author img

By

Published : Jul 27, 2021, 7:19 AM IST

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் ரூ.33.30 லட்சம் மோசடி செய்த நான்கு பேருக்கு மூன்றாண்டு சிறை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

CBE Court
CBE Court

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மடத்துப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூபதி, அபிநயா, இவர்களது நண்பர்களானா கோபியை சேர்ந்த சேர்ந்த குமார் ஆகியோருடன் இணைந்து தீரன் பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நாட்டுக்கோழி பண்ணை நிறுவனத்தை தொடங்கினர்.

அந்த நிறுவனத்தின் பண்ணை திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், ஷெட் அமைத்து கொடுத்து, 900 நாட்டுக்கோழிகுஞ்சுகள் அளிப்பதோடு, அதற்கு தேவையான தீவணங்கள், மருந்துகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் மாதந்தோறும் பராமரிப்புத்தொகையாக ரூ.12 ஆயிரம், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.16 ஆயிரம் அளிப்பதாக விளம்பரம் செய்தனர்.

மேலும் இரண்டாவது திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், நிறுவனமே 700 நாட்டுக்கோழிக்குஞ்சுகளை பராமரித்து, முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் அளிக்கும் எனவும், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.12 ஆயிரம் அளிப்பதாகவும், 3 ஆண்டுகால ஒப்பந்தம் செய்துகொள்வோம் எனவும் விளம்பரம் செய்தனர்.

இதை நம்பி, 14 பேர் ரூ.33.30 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், உறுதி அளித்தபடி பராமரிப்புத்தொகை, ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்காமல் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட திருப்பூர் சேர்ந்த அருண்பாலாஜி என்பவர், கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ரவி இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.12.60 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மடத்துப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூபதி, அபிநயா, இவர்களது நண்பர்களானா கோபியை சேர்ந்த சேர்ந்த குமார் ஆகியோருடன் இணைந்து தீரன் பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நாட்டுக்கோழி பண்ணை நிறுவனத்தை தொடங்கினர்.

அந்த நிறுவனத்தின் பண்ணை திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், ஷெட் அமைத்து கொடுத்து, 900 நாட்டுக்கோழிகுஞ்சுகள் அளிப்பதோடு, அதற்கு தேவையான தீவணங்கள், மருந்துகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் மாதந்தோறும் பராமரிப்புத்தொகையாக ரூ.12 ஆயிரம், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.16 ஆயிரம் அளிப்பதாக விளம்பரம் செய்தனர்.

மேலும் இரண்டாவது திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், நிறுவனமே 700 நாட்டுக்கோழிக்குஞ்சுகளை பராமரித்து, முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் அளிக்கும் எனவும், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.12 ஆயிரம் அளிப்பதாகவும், 3 ஆண்டுகால ஒப்பந்தம் செய்துகொள்வோம் எனவும் விளம்பரம் செய்தனர்.

இதை நம்பி, 14 பேர் ரூ.33.30 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், உறுதி அளித்தபடி பராமரிப்புத்தொகை, ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்காமல் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட திருப்பூர் சேர்ந்த அருண்பாலாஜி என்பவர், கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ரவி இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.12.60 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.