ETV Bharat / city

கோவை வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் என்பவரது இல்லத்தில் இருந்து லேப்டாப் உள்ளிட்ட சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

author img

By

Published : Sep 13, 2022, 4:48 PM IST

Etv Bharat
Etv Bharat

கோவையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள், உட்பட தமிழ்நாட்டில் 30-க்கும் மேலான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.13) சோதனை மேற்கொண்டனர்.

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 4ஆவது முறையாக சோதனை மேற்கொண்டனர். அவரது இல்லத்தில் காலை 6:00 மணி முதல் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் சுமார் 9 மணி நேரமாக மேற்கொண்ட சோதனை நிறைவு பெற்றது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சில ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றனர். இதனையடுத்து சந்திரசேகர் காரில் புறப்பட்டுச்சென்றார். இதனிடையே அவரது இல்லத்திற்கு அருகில் வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள பட்டியண்ணன் நகர் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

இதையும் படிங்க: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிசிடிவி பதிவுகள் சேகரிப்பு - சிபிசிஐடி பதில்

கோவையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள், உட்பட தமிழ்நாட்டில் 30-க்கும் மேலான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.13) சோதனை மேற்கொண்டனர்.

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 4ஆவது முறையாக சோதனை மேற்கொண்டனர். அவரது இல்லத்தில் காலை 6:00 மணி முதல் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் சுமார் 9 மணி நேரமாக மேற்கொண்ட சோதனை நிறைவு பெற்றது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சில ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றனர். இதனையடுத்து சந்திரசேகர் காரில் புறப்பட்டுச்சென்றார். இதனிடையே அவரது இல்லத்திற்கு அருகில் வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள பட்டியண்ணன் நகர் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

இதையும் படிங்க: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிசிடிவி பதிவுகள் சேகரிப்பு - சிபிசிஐடி பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.