கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பகுதிகளில் மக்களுக்குத் தேவையான பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி போன்றவற்றை செய்து தர வலியுறுத்தியும், சாக்கடைகளை உடனடியாக சுத்தம் செய்யக் கோரியும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க அடிக்கடி அப்பகுதிகளில் மருந்துகள் தெளிக்க வலியுறுத்தியும், தெருக்களில் சேரும் குப்பைகளை தினம் தினம் எடுக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்றது.
மேலும் மக்களின் பிரச்னைகளுக்கு திமுக எப்பொழுதும் போல் குரல் கொடுக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அசைவம் உண்போம்! குணத்தால் ஒருவர் என்போம்!' - ஸ்டாலின் பிறந்தநாள்