ETV Bharat / city

சிறுமியிடம் பாலியல் தொல்லை, கொலை முயற்சி... கதவை உடைத்து காத்த மக்கள்...

author img

By

Published : Apr 16, 2022, 10:28 AM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

coiembatore-youth-arrested-for-sexually-harassing-5-year-old-girl
coiembatore-youth-arrested-for-sexually-harassing-5-year-old-girl

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று (ஏப். 15) வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 5 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துவந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமி அலறித்துடித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த இளைஞர் சிறுமியை சுவற்றில் மோதி கொலை செய்ய முயற்சித்தார். இந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, இளைஞரின் வீட்டின் கதவை உடைத்தெறிந்து சிறுமியை மீட்டனர்.

இதையடுத்து இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனிடையே இளைஞர் தாக்கப்பட்டிருந்தால் மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு அலுவலர்

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று (ஏப். 15) வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 5 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துவந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமி அலறித்துடித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த இளைஞர் சிறுமியை சுவற்றில் மோதி கொலை செய்ய முயற்சித்தார். இந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, இளைஞரின் வீட்டின் கதவை உடைத்தெறிந்து சிறுமியை மீட்டனர்.

இதையடுத்து இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனிடையே இளைஞர் தாக்கப்பட்டிருந்தால் மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு அலுவலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.