ETV Bharat / city

‘நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தேசத்திற்கான பிரச்னை’ - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Oct 4, 2019, 12:59 PM IST

கோவை: ‘நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தமிழ்நாட்டிற்கான பிரச்னை அல்ல, அது இந்தியாவிற்கான பிரச்னை’ என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் காலநிலை மாற்ற அவசரநிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு

அப்போது பேசிய அவர், பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் இந்தியாவில் காலநிலை அவசர பிரகடனம் செய்வது தொடர்பாக பிரதமரையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தமிழ்நாட்டிற்கான பிரச்னை அல்ல. அது இந்தியாவிற்கான பிரச்னை. இந்த ஆண்டு மட்டுமல்லாது கடந்த ஆண்டு நடந்த மாணவர் சேர்க்கையிலும் இது குறித்த விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும். பேனர்கள் வைப்பது தேவையற்றது, மேலை நாடுகளில் இது போன்ற கலாசாரம் கிடையாது’ என்று கூறினார்.

இதையும் படியுங்க:

'நீட் தேர்வில் தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை!' - ஓபிஎஸ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் காலநிலை மாற்ற அவசரநிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு

அப்போது பேசிய அவர், பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் இந்தியாவில் காலநிலை அவசர பிரகடனம் செய்வது தொடர்பாக பிரதமரையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தமிழ்நாட்டிற்கான பிரச்னை அல்ல. அது இந்தியாவிற்கான பிரச்னை. இந்த ஆண்டு மட்டுமல்லாது கடந்த ஆண்டு நடந்த மாணவர் சேர்க்கையிலும் இது குறித்த விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும். பேனர்கள் வைப்பது தேவையற்றது, மேலை நாடுகளில் இது போன்ற கலாசாரம் கிடையாது’ என்று கூறினார்.

இதையும் படியுங்க:

'நீட் தேர்வில் தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை!' - ஓபிஎஸ்

Intro: நீட் தேர்வு விவகாரத்தில் ஆள் மாறாட்டம் தொடர்பாக சிபிஐ விசாரனை வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.Body:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் காலநிலை மாற்ற அவசரநிலை
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் ,புவி வெப்பமடைதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம், காலநிலை மாற்றங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்தியாவில் காலநிலை அவசர பிரகடனம் செய்யவேண்டும் இது தொடர்பாக பிரதமர் மற்றும் முதல்வர் சந்தித்து முறையிட இருக்கின்றோம் என்றார் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
பேனர்கள் வைப்பது தேவையற்றது, மேலை நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது.
பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாச்சாரம் போன்றவை தேவையற்றது என கூறிய அவர்
சீன ஜனாதிபதிக்கு பேனர் வைக்க விதிவிலக்கு கேட்டு இருக்கின்றார்கள்
அரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் இதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
நீட் மருத்துவ படிப்பில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து சிபி்ஐ விசாரணை நடத்த வேண்டும் மேலும் கடந்த ஆண்டு நீட் சேர்க்கை குறித்தும் விசாரித்து தவறு செய்த மாணவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்தவர்.
கோவை தடாகம் பகுதியில் செம்மண் கடத்துகின்றனர்.
சுற்றுசூழல் பாதிக்க கூடாது. இதற்கு உடந்தையாக இருக்கும்
அதிகாரிகள் கடுமையாக தண்டிக்க வேண்டும், செம்மண் கடத்த காரணமானவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தனார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.