ETV Bharat / city

பெங்களூருவில் இருந்து மாலேக்கு சென்ற விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்

பெங்களூரில் இருந்து மாலே நாட்டிற்கு சென்ற விமானத்தில் தீ பிடித்தற்கான அறிகுறிகள் ஏற்பட்டதால், உடனடியாக கோவை விமானத்தில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Aug 12, 2022, 9:52 PM IST

பெங்களூருவில் இருந்து மாலேக்கு சென்ற விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்
பெங்களூருவில் இருந்து மாலேக்கு சென்ற விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்

கோயம்புத்தூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இன்று (ஆக. 12) மதியம் 12:00 மணி அளவில் 92 பயணிகளுடன் கோ ஏர் விமானம் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலே நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் தீ பிடித்ததற்கான புகை ஒலி எச்சரிக்கை மணி திடீரென ஒலித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி கொச்சின் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால் கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்திற்கு தொடர்பு கொண்ட விமானி, இது குறித்து தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இருந்து மாலேக்கு சென்ற விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்

இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விமானம் தரை இறங்குவதை அடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணியினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 12.57 மணியளவில் விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் தீப்பிடிப்பதற்கான எந்த ஒரு அறிகுறிகள் இல்லாததால் விமான பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

இது குறித்து கோயம்புத்தூர் விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் கூறுகையில்,

”விமானத்தில் தீப்பிடித்ததுக்கான அலாரம் ஒலித்ததால் கோவையில் அந்த விமானம் தரையிறங்க அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த விமானத்தில் தீ பிடித்ததற்கான அறிகுறிகள் இல்லாததால் விமானம் கோவையில் இருந்து புறப்பட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட சில நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டு செல்லும்” என தெரிவித்தார்.

இதனிடையே விமானம் தரை இறக்கப்பட்டதிலிருந்து பயணிகள் வெளியே செல்ல அனுமதிக்கப் படவில்லை எனவும், குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய பயணத்தை தொடராவிட்டால் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும். முன்னதாக ஏற்பாடு செய்திருந்த பல காரியங்கள் இந்த விமான தாமத்தால் அவை பாழாகின்றன. விமானத்தில் யாரும் உரிய பதிலளிக்கவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.20.89 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் பறிமுதல்!

கோயம்புத்தூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இன்று (ஆக. 12) மதியம் 12:00 மணி அளவில் 92 பயணிகளுடன் கோ ஏர் விமானம் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலே நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் தீ பிடித்ததற்கான புகை ஒலி எச்சரிக்கை மணி திடீரென ஒலித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி கொச்சின் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால் கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்திற்கு தொடர்பு கொண்ட விமானி, இது குறித்து தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இருந்து மாலேக்கு சென்ற விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்

இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விமானம் தரை இறங்குவதை அடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணியினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 12.57 மணியளவில் விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் தீப்பிடிப்பதற்கான எந்த ஒரு அறிகுறிகள் இல்லாததால் விமான பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

இது குறித்து கோயம்புத்தூர் விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் கூறுகையில்,

”விமானத்தில் தீப்பிடித்ததுக்கான அலாரம் ஒலித்ததால் கோவையில் அந்த விமானம் தரையிறங்க அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த விமானத்தில் தீ பிடித்ததற்கான அறிகுறிகள் இல்லாததால் விமானம் கோவையில் இருந்து புறப்பட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட சில நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டு செல்லும்” என தெரிவித்தார்.

இதனிடையே விமானம் தரை இறக்கப்பட்டதிலிருந்து பயணிகள் வெளியே செல்ல அனுமதிக்கப் படவில்லை எனவும், குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய பயணத்தை தொடராவிட்டால் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும். முன்னதாக ஏற்பாடு செய்திருந்த பல காரியங்கள் இந்த விமான தாமத்தால் அவை பாழாகின்றன. விமானத்தில் யாரும் உரிய பதிலளிக்கவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.20.89 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.