ETV Bharat / city

மூன்று வேலை உணவுக்காக 85 வயதிலும் ஓயாத பயணம்... - Elderly man sewing house in Pollachi

கோவை: 85 வயதான முதியவர் ஒருவர் தள்ளாடும் வயதிலும் தனது தையல் இயந்திரத்தின் மூலம் உழைத்து சாப்பிட ஆசைப்பட்டும், போதிய வருமானமின்றி உணவுக்கே சிரமப்பட்டு வருகிறார். அந்த முதியவர் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு.

85 year old tailor who works in Pollachi
85 year old tailor who works in Pollachi
author img

By

Published : Dec 25, 2019, 2:34 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை அருகிலுள்ள கண்ணப்பன் நகரில் வசிப்பவர் அப்துல் ரஹீம். 85 வயதான இவர், தையல் இயந்திரத்தில் தனக்கு தேவையான தண்ணீர், மதிய உணவு, நாற்காலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நாள்தோறும் சுமார் 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை பயணிக்கிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக வீடு வீடாகச் சென்று துணிகளை வாங்கி தைத்து கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.

அதிகாலை எழுந்து தானே சமைத்து வேலைக்கு புறப்படும் இவர் அந்தி சாயும் பொழுதில் வீடு திரும்புகிறார். மேடு, பள்ளம் என்று பார்க்காமல் இந்த தள்ளாடும் வயதிலும் தன்னுடைய தையல் இயந்திரத்தையும் தள்ளிக்கொண்டு வேலை செய்யும் இவருக்கு ஒருநாள் வருமானம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரைதான்.

முதியவரின் 85 வயதிலும் ஓயாத பயணம் - சிறப்புத் தொகுப்பு

தற்போது மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வந்தபோதும், குடியிருப்புகளைத் தேடி தையல் வேலை செய்து வரும் இவரின் செயல் அனைவரின் மனதையும் நெகிழ வைக்கிறது. ஆதரவற்ற இவர் மூன்று வேளை உணவுக்கே சிரமப்படுவதாகவும் முதியோர் பென்ஷன்கூட கிடைக்கவில்லை என்றும் வருந்துகிறார்.

இதுவரை அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில், தன் கையே தனக்குதவி என்பதற்கேற்ப தையல் இயந்திரத்தை தள்ளி தனது வாழ்க்கையை நகர்த்தி வரும் அப்துல் ரஹீம் மீது அரசின் பார்வை எப்போது விழும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: அரசு உதவிக்காக காத்திருக்கும் அகல் விளக்கு தயாரிக்கும் பெண்மணி!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை அருகிலுள்ள கண்ணப்பன் நகரில் வசிப்பவர் அப்துல் ரஹீம். 85 வயதான இவர், தையல் இயந்திரத்தில் தனக்கு தேவையான தண்ணீர், மதிய உணவு, நாற்காலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நாள்தோறும் சுமார் 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை பயணிக்கிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக வீடு வீடாகச் சென்று துணிகளை வாங்கி தைத்து கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.

அதிகாலை எழுந்து தானே சமைத்து வேலைக்கு புறப்படும் இவர் அந்தி சாயும் பொழுதில் வீடு திரும்புகிறார். மேடு, பள்ளம் என்று பார்க்காமல் இந்த தள்ளாடும் வயதிலும் தன்னுடைய தையல் இயந்திரத்தையும் தள்ளிக்கொண்டு வேலை செய்யும் இவருக்கு ஒருநாள் வருமானம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரைதான்.

முதியவரின் 85 வயதிலும் ஓயாத பயணம் - சிறப்புத் தொகுப்பு

தற்போது மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வந்தபோதும், குடியிருப்புகளைத் தேடி தையல் வேலை செய்து வரும் இவரின் செயல் அனைவரின் மனதையும் நெகிழ வைக்கிறது. ஆதரவற்ற இவர் மூன்று வேளை உணவுக்கே சிரமப்படுவதாகவும் முதியோர் பென்ஷன்கூட கிடைக்கவில்லை என்றும் வருந்துகிறார்.

இதுவரை அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில், தன் கையே தனக்குதவி என்பதற்கேற்ப தையல் இயந்திரத்தை தள்ளி தனது வாழ்க்கையை நகர்த்தி வரும் அப்துல் ரஹீம் மீது அரசின் பார்வை எப்போது விழும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: அரசு உதவிக்காக காத்திருக்கும் அகல் விளக்கு தயாரிக்கும் பெண்மணி!

Intro:old manBody:old manConclusion:கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 85 வயது முதியவர் தள்ளாத வயதிலும் தையல் இயந்திரத்தை தள்ளி ஊர் ஊராக சென்று துணி தைப்பது அந்த பெரியவரின் வழக்கமான செயல் அந்த முதியவரின் செயல் குறித்து பேசுகிறது . பொள்ளாச்சி-5

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ளது கண்ணப்பன் நகர் பகுதியில் மண் சுவர் ஆனா ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார் 85 வயது முதியவர் அப்துல் ரஹீம். இவர் தையல் இயந்திரத்தை தள்ளிக்கொண்டு பழைய துணிகள் தைக்கும் தொழிலை கடந்த 40 ஆண்டுகளாக செய்து வருகிறார். இவர் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து தனக்குத் தேவையான உணவை தயார் செய்து மதிய உணவை எடுத்துக் கொண்டு தையல் வண்டியை தள்ளிக்கொண்டு தினமும் சுமார் 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை வாரம் முழுவதும் தினமும் ஒவ்வொரு திசையிலும் செல்வதை வழக்கமாக கொண்ட அப்துல்ரஹீம் சூரியன் உதிப்பதற்கு தாமதமாகலாம் ஆனால் தையல் இயந்திரத்தின் ஊசியில் நூல் கோர்ப்பது என்றும் தாமதம் ஆகாது என்கிறார் அப்துல் ரஹீம். தற்போதைய தையல் கலைஞர்கள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தை ஒரே இடத்தில் இருந்து தைத்துக் கொடுக்கும் நிலையில்
இந்த தள்ளாத வயதில் தையல் இயந்திரத்தின் பலத்தோடு மேடு பள்ளம் போன்ற பாதையில் நடந்து செல்லும் காட்சி அனைவரின் மனதையும் நெகிழ வைக்கின்றது. இவர் தனது தையல் இயந்திரத்தில் மதிய உணவு, குடிப்பதற்கு தண்ணீர் போன்றவற்றையும் தன்னுடன் எடுத்துச் செல்வதோடு சரியான நேரத்தில் உணவை உண்ணும் பழக்கத்தையும் வழக்கத்தில் வைத்துக் கொண்டுள்ளார். தினமும் தனது தொழிலின் மூலம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரும் வருமானம் வருவதாகவும் அதன் மூலம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதாகவும் அப்துல்ரஹீம் கூறுகிறார். குழந்தைப் பருவத்தில் நடந்து பழகுவதற்காக நடவண்டி மூலம் குழந்தைகள் நடப்பது போன்று இவர் தள்ளாடும் வயதில் தனது தையல் இயந்திரத்தின் மூலம் நடப்பது அனைவரின் மனதையும் நெகிழ வைக்கின்றது. இதுவரை அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில் தன்கையே தனக்குதவி என தையல் இயந்திரத்தை தள்ளி தன் வாழ்க்கையை நகர்த்தி வரும் அப்துல் ரஹீம் மீது அரசின் பார்வை எப்பொழுது விழும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
அப்துல் ரஹீம் கூறுகையில்
40 ஆண்டுகளாக தையல் தொழில் செய்வதாகவும் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே செய்ய முடியும் தற்போது கை கால் போன்றவை முடியாத நிலையில் உள்ளதாகவும். தனது மூன்று வேளை உணவு க்காகவே நான் தையல் இயந்திரத்தை தள்ளி தைப்பதாகவும் எனவே அரசு என் மீது கருணை காட்டி உதவி செய்ய வேண்டும் . முதுமை என்னும் சொல் அவர தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன் அரசு கருணை காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.