ETV Bharat / city

மான்கறி சாப்பிட்ட விவகாரம்: 11 பேருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்!

author img

By

Published : Oct 6, 2020, 1:58 AM IST

கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதியில் மான்கறி சாப்பிட்ட விவகாரத்தில் மேலும் 11 பேருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, முறையாக விசாரணை மேற்கொள்ளாத அலுவலர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

 வனச்சரக பகுதி
வனச்சரக பகுதி

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், கோவனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மான்கறி வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் வீட்டில் மான்கறி சமைத்து சாப்பிட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அங்கு வேலை செய்து வந்த இரண்டு பெண்களிடம் நடத்திய விசாரணையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மான் ஒன்றை அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி கடித்து கொன்ற மானின் மாமிசத்தை எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அவர்களிடம் இருந்த 5 கிலோ மான்கறியை பறிமுதல் செய்த வனத்துறையினர் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களை விடுவித்தனர்.

இந்த வழக்கில் இரு பெண்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டதால், தொடர்புடைய மற்றவர்கள் குறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின்னர் உதவி வனப் பாதுகாவலர் மேற்கொண்ட விசாரணையில் மான்கறி சமைத்து சாப்பிட்ட விவகாரத்தில் மேலும் 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கண்டறிந்து ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனிடையே முறையாக விசாரணை நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவராக இருந்த சுரேஷ், அதே வனச்சரகத்தில் சமூக காடுகள் வளர்ப்பு திட்ட பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் வனவர், வனக்காப்பாளர் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது மதுக்கரை வனச்சர அலுவலராக உள்ள சீனிவாசனுக்கு, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கான பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், கோவனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மான்கறி வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் வீட்டில் மான்கறி சமைத்து சாப்பிட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அங்கு வேலை செய்து வந்த இரண்டு பெண்களிடம் நடத்திய விசாரணையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மான் ஒன்றை அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி கடித்து கொன்ற மானின் மாமிசத்தை எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அவர்களிடம் இருந்த 5 கிலோ மான்கறியை பறிமுதல் செய்த வனத்துறையினர் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களை விடுவித்தனர்.

இந்த வழக்கில் இரு பெண்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டதால், தொடர்புடைய மற்றவர்கள் குறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின்னர் உதவி வனப் பாதுகாவலர் மேற்கொண்ட விசாரணையில் மான்கறி சமைத்து சாப்பிட்ட விவகாரத்தில் மேலும் 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கண்டறிந்து ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனிடையே முறையாக விசாரணை நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவராக இருந்த சுரேஷ், அதே வனச்சரகத்தில் சமூக காடுகள் வளர்ப்பு திட்ட பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் வனவர், வனக்காப்பாளர் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது மதுக்கரை வனச்சர அலுவலராக உள்ள சீனிவாசனுக்கு, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கான பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.