ETV Bharat / city

முதலாளியின் 'ஆடி' காரை திருடிச் சென்ற 'சவுகிதார்'! - Kilpauk

சென்னை: வீட்டுக் காவலாளியாகப் பணி புரிந்தவரே உரிமையாளரின் ஆடி காரை திருடிச் சென்ற சம்பவம் கீழ்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாட்ச்மேனே ஆடி காரை திருடிச் சென்ற அவலம்
author img

By

Published : May 10, 2019, 5:31 PM IST

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் நகைக்கடை வியாபாரி பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில்

நோபாளத்தைச் சேர்ந்த சாகர்குமார் என்பவர் கடந்த ஒரு வருடமாக காவலாளியாக வேலை செய்துவருகிறார். இந்நிலையில் பரத்குமார் தனது குடும்பத்தாருடன் கோடை விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இந்த வேளையில் பரத்குமாரின் காவலாளி சாகர்குமார், தனது முதாலாளியின் ஆடி கார் மீது கொண்ட மோகத்தால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிளாட்டினம் கருப்பு நிற ஆடி காரை திருடிச் சென்றுள்ளார்.

பின்னர் பரத்குமாரின் வீட்டிற்கு அவரது சகோதரர் ஆகாஷ் குமார் வந்து பார்த்தபோது அங்கிருந்த ஆடி கார், வீட்டின் காவாளி மாயமாகி இருப்பது குறித்து தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் காவல்துறையினரிடம் இச்சம்பவ்ம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் திருட்டு வழக்குப்பதிவு செய்து கார் மற்றும் அதை திருடிச் சென்ற சாகர்குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு எழும்பூர் தில்லையாடி வள்ளியம்மை சாலை சந்திப்பில் சாகர் குமார் தனது முதலாளியிடமிருந்து திருடிய அதே ஆடி காரில் சென்றபோது, எழும்பூர் போக்குவரத்து காவல்துறையினரின் வாகன சோதனையில் சிக்கியயுள்ளார். அப்போது அவர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் காவல்துறையினரை கண்டு பீதியடைந்த சாகர் குமார், காவல்துறையினரிடம் காரை வைத்துக்கொள்ளுங்கள் காலையில் காவல்நிலையத்தில் வந்து பெற்று கொள்கிறேன் எனக் கூறி சென்றுள்ளார்.

எழும்பூர் காவல்நியைத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருடுபோன ஆடி கார்

இதனையடுத்து காவலாளி சாகர்குமார் திருடிய ஆடி கார் திருட்டு கார் என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து எழும்பூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருடப்பட்ட ஆடி காரை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், தப்பியோடிய சாகர்குமாரை தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் நகைக்கடை வியாபாரி பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில்

நோபாளத்தைச் சேர்ந்த சாகர்குமார் என்பவர் கடந்த ஒரு வருடமாக காவலாளியாக வேலை செய்துவருகிறார். இந்நிலையில் பரத்குமார் தனது குடும்பத்தாருடன் கோடை விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இந்த வேளையில் பரத்குமாரின் காவலாளி சாகர்குமார், தனது முதாலாளியின் ஆடி கார் மீது கொண்ட மோகத்தால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிளாட்டினம் கருப்பு நிற ஆடி காரை திருடிச் சென்றுள்ளார்.

பின்னர் பரத்குமாரின் வீட்டிற்கு அவரது சகோதரர் ஆகாஷ் குமார் வந்து பார்த்தபோது அங்கிருந்த ஆடி கார், வீட்டின் காவாளி மாயமாகி இருப்பது குறித்து தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் காவல்துறையினரிடம் இச்சம்பவ்ம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் திருட்டு வழக்குப்பதிவு செய்து கார் மற்றும் அதை திருடிச் சென்ற சாகர்குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு எழும்பூர் தில்லையாடி வள்ளியம்மை சாலை சந்திப்பில் சாகர் குமார் தனது முதலாளியிடமிருந்து திருடிய அதே ஆடி காரில் சென்றபோது, எழும்பூர் போக்குவரத்து காவல்துறையினரின் வாகன சோதனையில் சிக்கியயுள்ளார். அப்போது அவர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் காவல்துறையினரை கண்டு பீதியடைந்த சாகர் குமார், காவல்துறையினரிடம் காரை வைத்துக்கொள்ளுங்கள் காலையில் காவல்நிலையத்தில் வந்து பெற்று கொள்கிறேன் எனக் கூறி சென்றுள்ளார்.

எழும்பூர் காவல்நியைத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருடுபோன ஆடி கார்

இதனையடுத்து காவலாளி சாகர்குமார் திருடிய ஆடி கார் திருட்டு கார் என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து எழும்பூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருடப்பட்ட ஆடி காரை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், தப்பியோடிய சாகர்குமாரை தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் நகைக்கடை வியாபாரி பரத் குமார் என்பவர் வசித்து வருகிறார். 

பாரத்குமாரின் வீட்டிற்கு காவலாளியாக நோபாளத்தைச் சேர்ந்த சாகர்குமார் கடந்த ஒருவருடமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த  PY 01 BC 2395 AUDI  (Platinum Black Colour) காரை சாகர்குமார் திருடிச் சென்று விட்டார்.   

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசில் பரத் குமாரின் சகோதரர் ஆகாஷ் குமார் புகார் கொடுத்தார். போலீசார் திருட்டு வழக்குப்பதிவு செய்து காரை திருடிச் சென்ற சாகர்குமாரை தேடி வந்தனர். 

இந்நிலையில் நேற்று இரவு எழும்பூர் தில்லையாடி வள்ளியம்மை சாலை சந்திப்பில், சாகர் குமார் தான் திருடிய ஆடி காரில் வந்துள்ளார். வாகன தணிக்கையில் ஈடுபட்ட எழும்பூர் போக்குவரத்து போலீசார் சாகர் குமாரை சோதனை செய்த போது, அவர் குடி போதையில் இருந்தது தெரிய வந்தது. உடனே சாகர் குமார் போலீசாரிடம் காரை வைத்துக்கொள்ளுங்கள் காலையில் காவல்நிலையம் வந்து பெற்று கொள்கிறேன் என கூறி கம்பி நீட்டி விட்டார். தற்போது அந்த கார் திருட்டு கார் என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து தகவல் வர சாகர் குமார் தான் திருடன் என தெரியாமல் கோட்டை விட்ட காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.