ETV Bharat / city

ரூ. 40 ஆயிரம் கோடி சேமிப்புப்பணம் - மத்திய அரசு பறிக்க திட்டமிடுவதாக புகார்

author img

By

Published : Feb 22, 2020, 5:37 PM IST

சென்னை: தொகுப்புச் சட்டங்களின் மூலம் தொழிலாளர்களின் சேமிப்புப் பணம் ரூ. 40 ஆயிரம் கோடியைப் பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறை கூறியுள்ளனர்.

workers
workers

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, ”மத்திய அரசின் தொழில்வாரியான 13 தொகுப்புச் சட்டங்களினால், கட்டட கட்டுமானத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், திரை - பத்திரிகை மற்றும் பல்வேறு தொழில்வாரியான சட்டங்களை ரத்து செய்ய வழி வகை செய்யும் மசோதா மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கட்டடத் தொழிலாளர்கள் உள்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் ரூ. 40 ஆயிரம் கோடி வாரியங்களில் உள்ளது. அந்தப் பணம் இனி என்னவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 34 நல வாரியங்கள் உள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொகுப்புச் சட்டத்தை திரும்பப்பெற மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ரூ. 40 ஆயிரம் கோடி சேமிப்புப்பணம் - மத்திய அரசு பறிக்க திட்டமிடுவதாகப் புகார்

ஏற்கனவே எங்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் இருக்கும் நிலையில், மத்திய அரசு இப்படி நடந்துகொள்வது அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் கோரிக்கை தொடர்பாக லட்சம் கடிதங்களை பிரதமருக்கு அனுப்பியும், தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மார்ச் 23 ஆம் தேதி, மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என்றனர்.

இதையும் படிங்க: அடையாறு வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டுவதில் கோடிக்கணக்கில் முறைகேடு: திமுக ஆர்ப்பாட்டம்!

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, ”மத்திய அரசின் தொழில்வாரியான 13 தொகுப்புச் சட்டங்களினால், கட்டட கட்டுமானத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், திரை - பத்திரிகை மற்றும் பல்வேறு தொழில்வாரியான சட்டங்களை ரத்து செய்ய வழி வகை செய்யும் மசோதா மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கட்டடத் தொழிலாளர்கள் உள்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் ரூ. 40 ஆயிரம் கோடி வாரியங்களில் உள்ளது. அந்தப் பணம் இனி என்னவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 34 நல வாரியங்கள் உள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொகுப்புச் சட்டத்தை திரும்பப்பெற மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ரூ. 40 ஆயிரம் கோடி சேமிப்புப்பணம் - மத்திய அரசு பறிக்க திட்டமிடுவதாகப் புகார்

ஏற்கனவே எங்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் இருக்கும் நிலையில், மத்திய அரசு இப்படி நடந்துகொள்வது அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் கோரிக்கை தொடர்பாக லட்சம் கடிதங்களை பிரதமருக்கு அனுப்பியும், தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மார்ச் 23 ஆம் தேதி, மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என்றனர்.

இதையும் படிங்க: அடையாறு வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டுவதில் கோடிக்கணக்கில் முறைகேடு: திமுக ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.