ETV Bharat / city

காவல் துறையினருக்கு டிமிக்கி கொடுத்த 2 ரவுடிகள் கைது!

சென்னை: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகள் பல நாட்களாக தேடப்பட்டுவந்த நிலையில், அவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author img

By

Published : Jun 19, 2019, 5:04 PM IST

ROWDY

சென்னை எஸ்.எஸ். புரத்தைச் சேர்ந்தவர் பரத். இவர் மீது இரண்டு கொலை வழக்குகளும், திடீர் நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது ஐந்து கொலை வழக்குகளும் நிலுவையில் இருந்துவருகின்றன. இது தவிர கொலை முயற்சி, ஆள்கடத்தல், திருட்டு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் இருவர் மீதும் உள்ளன. இருவரும் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் பிடிக்க தலைமைச் செயலக காலனி (G5) காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, நேற்று முன்தினம் சிக்கிய பரத்தை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதேபோன்று நேற்று மற்றொரு குற்றவாளியான சக்திவேலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் அவரையும் சிறையில் அடைத்தனர்.

சென்னை எஸ்.எஸ். புரத்தைச் சேர்ந்தவர் பரத். இவர் மீது இரண்டு கொலை வழக்குகளும், திடீர் நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது ஐந்து கொலை வழக்குகளும் நிலுவையில் இருந்துவருகின்றன. இது தவிர கொலை முயற்சி, ஆள்கடத்தல், திருட்டு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் இருவர் மீதும் உள்ளன. இருவரும் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் பிடிக்க தலைமைச் செயலக காலனி (G5) காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, நேற்று முன்தினம் சிக்கிய பரத்தை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதேபோன்று நேற்று மற்றொரு குற்றவாளியான சக்திவேலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் அவரையும் சிறையில் அடைத்தனர்.

Intro:Body:*பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 2 பேர் கைது!*

சென்னை ss புரத்தை சேர்ந்தவர் பரத். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள், உட்பட கொலை முயற்சி, ஆள்கடத்தல், திருட்டு போன்று 11 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இவரை போலீசார் தேடி வந்தனர்.

அதேபோல திடீர் நகரை சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், போன்று 12 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சக்திவேலை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இவர்களை பிடிக்க தலைமைச் செயலக காலனி(G5) காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் பரத்தை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார் புழல் ஜெயிலில் அடைத்தனர்.

அதுபோல சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.