ETV Bharat / city

ஆன்லைனில் கறுப்பு பூஞ்சை மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது

author img

By

Published : Jun 16, 2021, 5:21 PM IST

சென்னை: கறுப்பு பூஞ்சை மருந்தை ஆன்லைனில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தாம்பரம் காவலர்கள் மேலும் இருவரை கைதுசெய்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

கருப்பு பூஞ்சை மருந்தை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில் மேலும் இருவர் கைது
கருப்பு பூஞ்சை மருந்தை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை தாம்பரம் காவலர்கள் கறுப்பு பூஞ்சை மருந்தை ஆன்லைனில் விற்க முயன்ற இருரை கைது செய்தனர். ஏற்கனவே ஆன்லைனில் கறுப்பு பூஞ்சை மருந்தை அதிக விலைக்கு விற்க முயன்ற ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது, சிரஞ்சீவி, பிரசாந்த ஆகிய இருவர் இதில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைதுசெய்து ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் மீது தாம்பரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை தாம்பரம் காவலர்கள் கறுப்பு பூஞ்சை மருந்தை ஆன்லைனில் விற்க முயன்ற இருரை கைது செய்தனர். ஏற்கனவே ஆன்லைனில் கறுப்பு பூஞ்சை மருந்தை அதிக விலைக்கு விற்க முயன்ற ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது, சிரஞ்சீவி, பிரசாந்த ஆகிய இருவர் இதில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைதுசெய்து ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் மீது தாம்பரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.