சென்னை கோயம்பேடு பகுதியில் ஆல் அவுட் நிறுவன பெயரை பயன்படுத்தி போலியான கொசு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தடுப்பதற்காக, சுகாதாரத்துறை அலுவலர்களுடன் சென்ற போலீசார் கோயம்பேட்டில் உள்ள உணவு தானிய கிடங்கு வளாகம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் ஆஷாபுரா ஸ்டோர் மற்றும் பெரியார் காய்கறி மார்க்கெட் கடை ஆகிய இடங்களில் 'ஆல் அவுட்' என்ற பெயரில் போலியான கொசு ஒழிப்பு மருந்துகளை விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. அந்தக் கடைகளில் இருந்து 130 போலி ஆல் அவுட் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
![போலியாக 'ஆல் அவுட்' பெயரில் கொசு மருந்து விற்ற இருவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-alloutmedicine-script-7202290_29042022125615_2904f_1651217175_122.jpg)
இதையும் படிங்க: ஆல் அவுட் கொசு மருந்து குடித்த 3 வயது குழந்தை பலி