இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக் கடன்களுக்கான மாத தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி, இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கைப் பார்ப்பது நியாயமல்ல.
இப்பிரச்னையில் பிரதமர் மோடியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடனடியாக தலையிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத் தவணைகளிலிருந்து விலக்குப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை'- டிடிவி தினகரன் ட்வீட்!