ETV Bharat / city

தண்டவாளத்தை கடக்க முயன்ற பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி! - train accident in noongampakkam

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பச்சையப்பன் கல்லூரி மாணவன் ரயில் மோதி பரிதாபமாக பலியானார்.

நுங்கம்பாக்கத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவர் பலி
author img

By

Published : Sep 5, 2019, 9:25 AM IST

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயின்றுவந்த மாணவன் சங்கர். இக்கல்லூரியின் விடுதியில் தங்கிப் பயின்ற இவர் திருவள்ளூர் புத்தேரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக சக மாணவர்களுடன் கல்லூரியில் பின்புறம் அமைந்துள்ள சுவரின் மீது ஏறி குதித்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் செல்ல முயற்சி செய்துள்ளார்.

அப்போது சங்கர் தண்டவாளத்தைக் கடக்க முற்படும்போது சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லக்கூடிய ரயில் மோதியதில் பத்தடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். பின்னர் இது குறித்து 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் சங்கர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயின்றுவந்த மாணவன் சங்கர். இக்கல்லூரியின் விடுதியில் தங்கிப் பயின்ற இவர் திருவள்ளூர் புத்தேரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக சக மாணவர்களுடன் கல்லூரியில் பின்புறம் அமைந்துள்ள சுவரின் மீது ஏறி குதித்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் செல்ல முயற்சி செய்துள்ளார்.

அப்போது சங்கர் தண்டவாளத்தைக் கடக்க முற்படும்போது சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லக்கூடிய ரயில் மோதியதில் பத்தடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். பின்னர் இது குறித்து 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் சங்கர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:Body:சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் சங்கர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் புத்தேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். இவர் சில தினங்கள் பச்சையப்பன் கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பது வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் சில சமயங்களில் தனது வீட்டிற்கு செல்வதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் சக மாணவர்களுடன் பச்சையப்பன் கல்லூரியில் பின்புறம் அமைந்துள்ள சுவரின் மீது ஏறி குதித்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது தண்டவாளத்தைக் கடக்க முற்படும் போது பீச்சில் இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய ரயில் சங்கரை மோதி உள்ளது. இதையடுத்து சங்கர் பத்தடி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

பின்னர் இதுகுறித்து 108 அவசர ஊர்தி ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்க்கையில் சங்கர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.