ETV Bharat / city

3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

author img

By

Published : Sep 24, 2021, 2:58 PM IST

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

1. உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29-க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. தமிழ்நாடு முழுவதும் நடந்த ஸ்டாமிங் ஆபரேஷன்; ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக கொலைகள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நள்ளிரவில் தமிழ்நாடு காவல்துறை ஸ்டாமிங் ஆபரேஷனை நடத்தி 560 ரவுடிகளை கைது செய்துள்ளது.

3. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது - இபிஎஸ்

'சரியான தலைமை இல்லாமல் நிர்வாகத் திறமையும் இல்லாமல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத ஆட்சி நடைபெற்றுவருகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

4. ‘மக்களை தேடி செல்லும் அரசு திமுக’ - ஸ்டாலின்

சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ‘அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி மக்களைத் தேடி அரசு செல்லும் காலம் இது’ என தெரிவித்துள்ளார்.

5. நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன் - இபிஎஸ்

'முதலமைச்சராக இருந்தபோது, நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன். நாங்கள் அப்படி செய்யவில்லை, மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு பணியாற்றிவந்தோம்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

6. 118 பீரங்கி வாகனம் வாங்க ஆர்டர்: தற்சார்பு இந்தியா இலக்கிற்கு மேலும் வலிமை!

சென்னையில் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 118 அர்ஜுன் எம்கே-1 ஏ பீரங்கி வாகனத்துக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆர்டர் கொடுத்துள்ளது.

7. நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- டெல்லியில் பரபரப்பு

வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

8. தடுப்பூசி போட்டாதான் சாப்பாடு - இல்லைனா அப்படியே போய்டு

ஹோட்டலில் சாப்பிட வேண்டுமென்றால் கரோனா தொற்று தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும் என குஜராத் ஹோட்டல் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி தெரிவித்துள்ளார்.

9. நெத்தியடி - மாணவர்களிடம் மாற்றத்தை விதைக்கும் கேரளா

வரதட்சணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வரதட்சணை வாங்க மாட்டேன், தரமாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகே விண்ணப்பங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

10. டாக்டர் ட்ரெய்லர் - வெளியானது அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள, ’டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29-க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. தமிழ்நாடு முழுவதும் நடந்த ஸ்டாமிங் ஆபரேஷன்; ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக கொலைகள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நள்ளிரவில் தமிழ்நாடு காவல்துறை ஸ்டாமிங் ஆபரேஷனை நடத்தி 560 ரவுடிகளை கைது செய்துள்ளது.

3. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது - இபிஎஸ்

'சரியான தலைமை இல்லாமல் நிர்வாகத் திறமையும் இல்லாமல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத ஆட்சி நடைபெற்றுவருகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

4. ‘மக்களை தேடி செல்லும் அரசு திமுக’ - ஸ்டாலின்

சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ‘அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி மக்களைத் தேடி அரசு செல்லும் காலம் இது’ என தெரிவித்துள்ளார்.

5. நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன் - இபிஎஸ்

'முதலமைச்சராக இருந்தபோது, நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன். நாங்கள் அப்படி செய்யவில்லை, மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு பணியாற்றிவந்தோம்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

6. 118 பீரங்கி வாகனம் வாங்க ஆர்டர்: தற்சார்பு இந்தியா இலக்கிற்கு மேலும் வலிமை!

சென்னையில் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 118 அர்ஜுன் எம்கே-1 ஏ பீரங்கி வாகனத்துக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆர்டர் கொடுத்துள்ளது.

7. நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- டெல்லியில் பரபரப்பு

வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

8. தடுப்பூசி போட்டாதான் சாப்பாடு - இல்லைனா அப்படியே போய்டு

ஹோட்டலில் சாப்பிட வேண்டுமென்றால் கரோனா தொற்று தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும் என குஜராத் ஹோட்டல் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி தெரிவித்துள்ளார்.

9. நெத்தியடி - மாணவர்களிடம் மாற்றத்தை விதைக்கும் கேரளா

வரதட்சணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வரதட்சணை வாங்க மாட்டேன், தரமாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகே விண்ணப்பங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

10. டாக்டர் ட்ரெய்லர் - வெளியானது அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள, ’டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.