ETV Bharat / city

அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தை வாபஸ் வாங்கிய ஜாக்டோ ஜியோ! - பழைய ஓய்வூதிய திட்டம்

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து தீர்வு எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து நாளை நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

jacto geo
author img

By

Published : Sep 23, 2019, 11:41 PM IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி உதயகுமார் ஆகிய இருவரையும் சந்தித்து கோரிக்கை தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒருங்கிணைப்பாளர் மோசஸ், ”2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பணி நீக்கம், பணி மாறுதல் உள்ளிட்ட செயல்கள் ஆசிரியர்கள் மீது ஏவப்பட்டன.

இந்த செயலை அரசு திரும்பப் பெற்றுகொள்வதாகவும், ஒன்பது அம்ச கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து இதற்கான தீர்வு எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதன் காரணமாக மாவட்டந்தோறும் நாளை நடைபெறவிருந்த ஓர் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளோம். வரக்கூடிய நாட்களில் கோரிக்கை தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முடிவு எடுக்கப்படும்” என்றார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி உதயகுமார் ஆகிய இருவரையும் சந்தித்து கோரிக்கை தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒருங்கிணைப்பாளர் மோசஸ், ”2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பணி நீக்கம், பணி மாறுதல் உள்ளிட்ட செயல்கள் ஆசிரியர்கள் மீது ஏவப்பட்டன.

இந்த செயலை அரசு திரும்பப் பெற்றுகொள்வதாகவும், ஒன்பது அம்ச கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து இதற்கான தீர்வு எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதன் காரணமாக மாவட்டந்தோறும் நாளை நடைபெறவிருந்த ஓர் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளோம். வரக்கூடிய நாட்களில் கோரிக்கை தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Intro:Body:
https://we.tl/t-EmBJ3EQ0WT

*ஜாக்டோ-ஜியோ- மாவட்டம் தோரும் நாளை நடக்கவிருந்த ஓர் நாள் உண்ணாவிரத போர்ராட்டம் வாப்பஸ்*

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாதக கால நிலுவை தொகையை வழங்கிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அமச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை தமிழகம் முழுவதும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் ஜாக்டோ.ஜியோ அமைப்பின் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆர்.பி உதயகுமார் ஆகியோரை சந்தித்து கோரிக்கை தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

கூட்டத்திற்க்குப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒருங்கிணைப்பாளர் மோசஸ்,

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற 5000 க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீது பணி நீக்கம் மற்றும் பணி மாறுதல் உள்ளிட்ட செயல்கள் ஆசிரியர்கள் மீது ஏவப்பட்டது. இந்த செயலை அரசு திரும்பி பெற்றுகொள்வதாகவும், 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து இதற்கான தீர்வு எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்ததன் காரனமாக நாளை நடைபெரவிருந்த ஓர் நாள் உண்ணாவிரத போராட்டம் திரும்பபெற்று கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும் வரக்கூடிய நாட்க்களில் கோரிக்கை தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்ச்சத்தில், வரும் அக்டோபர் மாதம் 2 வது வாரத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தா

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.