ETV Bharat / city

குரூப் 4 தேர்வு - விசாரணைக்கு வந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு!

author img

By

Published : Jan 13, 2020, 6:48 PM IST

சென்னை: குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக அழைக்கப்பட்ட தேர்வர்களுக்கு கணிதம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை வழங்கி,  விடை எழுதித் தரும்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாங்கியுள்ளது.

enquiry
enquiry

குரூப் - 4 தேர்வு தரவரிசைப் பட்டியலில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில், முதல் 100 இடங்களில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். இதனால் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக பெரும்பாலானோர் புகார் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில், ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விசாரணைக்கு இன்று நேரில் வருமாறு அழைத்திருந்தது.

அதன்படி, முதல் 100 பேரில் 35 இடங்களைப் பெற்ற அனைவரிடமும், அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அவர்களிடம், ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு மையமாக தேர்ந்தெடுத்தது ஏன்?, முறைகேடுகளில் ஏதேனும் ஈடுபட்டீர்களா ?, எத்தனை ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வருகிறீர்கள்? எனப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதனை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் கணிதம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை வழங்கி, விடை எழுதித் தரும்படியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாங்கியுள்ளது.

5 இடங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக 2 மணி நேரமும், இறுதியில் தேர்வரின் விவரங்கள் அனைத்தும் வாங்கிக் கொள்ளப்பட்டு, விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்படும்போது வரவேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: குரூப் - 4 தேர்வு முறைகேடு - டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்

குரூப் - 4 தேர்வு தரவரிசைப் பட்டியலில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில், முதல் 100 இடங்களில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். இதனால் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக பெரும்பாலானோர் புகார் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில், ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விசாரணைக்கு இன்று நேரில் வருமாறு அழைத்திருந்தது.

அதன்படி, முதல் 100 பேரில் 35 இடங்களைப் பெற்ற அனைவரிடமும், அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அவர்களிடம், ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு மையமாக தேர்ந்தெடுத்தது ஏன்?, முறைகேடுகளில் ஏதேனும் ஈடுபட்டீர்களா ?, எத்தனை ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வருகிறீர்கள்? எனப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதனை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் கணிதம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை வழங்கி, விடை எழுதித் தரும்படியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாங்கியுள்ளது.

5 இடங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக 2 மணி நேரமும், இறுதியில் தேர்வரின் விவரங்கள் அனைத்தும் வாங்கிக் கொள்ளப்பட்டு, விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்படும்போது வரவேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: குரூப் - 4 தேர்வு முறைகேடு - டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்

Intro:
குருப் 4 தேர்வு விசாரணைக்கு வந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு Body:
குருப் 4 தேர்வு விசாரணைக்கு வந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு

சென்னை,
குருப் 4 தேர்வில் முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் அழைக்கப்பட்ட தேர்வர்களுக்கு
கணிதம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை வழங்கி,  விடை எழுதி தரும்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாங்கி உள்ளது.

அரசு பணிக்கு தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்கள் என அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தி சோதனைகுரூப்-4 தேர்வில் முதல் 100 தரவரிசையில் இடம் பெற்ற 35 தேர்வர்களிடம் தமிழ்நாடு அரசுப் பணியாயர் தேர்வாணையம் இன்று விசாரணையை துவக்கியது.

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முதல் 100 பேரில் 35 இடங்களைப் பெற்ற அனைவரிடமும் அதன் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை நாளையும் நீடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்களிடம் விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு மையமாக தேர்ந்தெடுத்தது ஏன்? முறைகேடுகளில் ஏதேனும் ஈடுபட்டீர்களா ?எத்தனை ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வருகிறீர்கள்? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறினர்.
மேலும் தேர்வர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அதிகாரிகள் 3 பேர் அடங்கிய குழுவினர் பல்வேறுக் கேள்விகளை எழுப்பி அதனை பதிவு செய்துள்ளனர். 5 இடங்களில் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் தேர்வர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும்,  இறுதியில் தேர்வரின் விவரங்கள் அனைத்தும் வாங்கிக் கொள்ளப் பட்டு, பின்னர் விசாரணைக்கு அழைக்கப்படும் போது மீண்டும் வரவேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தேர்வர்கள் வேலூர், விழுப்புரம், அரக்கோணம் ஆகியப் பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் சென்று தேர்வினை எழுதியுள்ளனர். இவர்களிடம் கேட்டப்போது ராமேஸ்வரத்தில் இறந்தவர்களுக்கான சடங்கினை செய்ய சென்றதாக கூறினர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பாகவே உள்ளது. இந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெற்ற இருக்க அதிகளில் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.


ராமேஸ்வரம் பகுதியில் 6 மையங்களிலும், கீழக்கரை பகுதியில் மூன்று மையங்களிலும் என 9 மையங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மட்டும் அந்த மாவட்டத்தை சேர்ந்த  57 பேரும், வெளி மாவட்டங்களில் இருந்து 40 பேரும் என  ஒட்டுமொத்தமாக 97 பேர் அரசுப் பணிக்குத் தேர்வாகி இருந்தனர்.
குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரண்டு மையங்களில் இதர மாவட்டங்களைச் சேர்ந்த 262 பெயர் தேர்வு  எழுதினர். இந்த 2 மையங்களில் தேர்வு எழுதிய 2840 பேரில்  35 பேர் முதல் 100 தரவரிசையில் இடம் பெற்றிருந்தனர் .
குறிப்பிட்ட இரண்டு மையங்களில் இருந்து மட்டும் 35 பேர் தரவரிசையில் முன்னிலை பெற்றது, குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருக்ககூடும்  என்கிற சந்தேகத்தை தேர்வர்களிடம் எழுப்பியது.

இதனையடுத்து குரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்வு செய்யப்பட்ட 24 ஆயிரம் தேர்வர்களின் தேர்வுத் தாள்களை அரசு பணியாளர் தேர்வாணையம் ஆய்வு செய்து விசாரணையை மேற்கொண்டது.
அதனைத் தொடர்ந்து அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் ,   தேர்வாணைய தேர்வுக்கட்டுபாட்டுத்துறைஅலுவலர் சுதன்  ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரில் சென்று விசாரணையை  மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




 
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.