ETV Bharat / city

பொறியியல் கலந்தாய்வு - 90,000 இடங்கள் காலி

சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் கலந்தாய்வில் 90,737 இடங்கள் காலியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

author img

By

Published : Jul 28, 2019, 3:56 PM IST

கல்லூரி

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு விரும்பாததால் கலந்தாய்விற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 90,737 மாணவர்கள் சேராமல் 54.30 விழுக்காடு காலியாக உள்ளது. பொதுப்பிரிவினருக்கான நான்கு கட்ட பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 45 விழுக்காடு பொறியியல் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நிரப்புவதற்கான இடங்கள் 1லட்சத்து 72ஆயிரத்து 940ஆக உள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதிவரை நடைபெற்று முடிந்துள்ளது.

நான்கு கட்ட கலந்தாய்வின் முடிவில் பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் இருக்கிறது. அழைக்கப்பட்ட 1 லட்சத்து ஆயிரத்து 692 மாணவர்களில் 76,364 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பினை தேர்வு செய்துள்ளனர்.

13 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 100 விழுக்காடு இடங்களும், 30 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 90 விழுக்காடு இடங்களும், 157 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 50 விழுக்காடு இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும் 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை. ஐந்து கல்லூரிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை போதிய அளவு இல்லாததால் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் வரும் காலத்தில் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தல் சிரமமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு விரும்பாததால் கலந்தாய்விற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 90,737 மாணவர்கள் சேராமல் 54.30 விழுக்காடு காலியாக உள்ளது. பொதுப்பிரிவினருக்கான நான்கு கட்ட பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 45 விழுக்காடு பொறியியல் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நிரப்புவதற்கான இடங்கள் 1லட்சத்து 72ஆயிரத்து 940ஆக உள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதிவரை நடைபெற்று முடிந்துள்ளது.

நான்கு கட்ட கலந்தாய்வின் முடிவில் பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் இருக்கிறது. அழைக்கப்பட்ட 1 லட்சத்து ஆயிரத்து 692 மாணவர்களில் 76,364 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பினை தேர்வு செய்துள்ளனர்.

13 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 100 விழுக்காடு இடங்களும், 30 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 90 விழுக்காடு இடங்களும், 157 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 50 விழுக்காடு இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும் 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை. ஐந்து கல்லூரிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை போதிய அளவு இல்லாததால் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் வரும் காலத்தில் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தல் சிரமமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேராமல் 90,737 இடங்கள் காலி Body:

சென்னை,

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு விரும்பாததால் கலந்தாய்விற்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில் 90,737 மாணவர்கள் சேராமல் 54.30 சதவீதம் காலியாக உள்ளது. பொதுப்பிரிவினருக்கான 4 கட்ட பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 45 சதவிகித பொறியியல் இடங்கள் மட்டுமே நிர்ம்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 479பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் நிரப்புவதற்கான இடங்கள் 1லட்சத்து 72ஆயிரத்து 940 உள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜுலை 3ந் தேதி துவங்கி 28 ந் தேதி வரை நடைபெற்று முடிவுற்றுள்ளது . 4கட்ட பொறியியல் கலந்தாய்வின் முடிவில் பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் இருக்கிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வில் கலந்துக் கொள்ள 1 லட்சத்து ஆயிரத்து 692 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 76,364 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பினை தேர்வு செய்துள்ளனர்.
13 பொறியியல் கல்லூரியில் உள்ள 100 சதவீதம் இடங்களும் நிரம்பி உள்ளன. 90 சதவீத இடங்கள் 30 பொறியியல் கல்லூரியில் நிரம்பி உள்ளன. 50 சதவீத இடத்திற்கு மேல் 157 பொறியியல் கல்லூரியில் மட்டுமே இடங்கள் நிரம்பி உள்ளது.

16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 5 கல்லூரிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 7கல்லூரிகளில் 2மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
28 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டு பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வின் முடிவில் 90ஆயிரத்து 737இடங்கள் காலியாக உள்ளது .

பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை போதிய அளவு இல்லாததால் சுமார் 100க்கு மேற்பட்டவை வரும் காலத்தில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சரியாக கற்றுத் தருவதில் மிகவும் சிரமமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.