ETV Bharat / city

'இந்தி, சமஸ்கிருதத்தை புகுத்தி தாய்மொழியை சிதைக்க முயற்சி...!'

author img

By

Published : Jan 3, 2020, 8:44 AM IST

Updated : Jan 4, 2020, 2:23 AM IST

சென்னை: இந்தி, சமஸ்கிருதத்தை புகுத்தி தாய்மொழியை சிதைக்க ஒரு கூட்டம் செயல்படுகிறது எனத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

TN Opposition Leader and DMK Chief MK Stalin speaks about Hindi and Sanskrit  DMK Chief MK Stalin  MK Stalin speaks about Hindi and Sanskrit
TN Opposition Leader and DMK Chief MK Stalin speaks about Hindi and Sanskrit

முத்தமிழ்ப் பேரவையின் 40ஆம் ஆண்டு இசை விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தொடர்ந்து முத்தமிழ்ப் பேரவை சார்பில் விருதுகள் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:

கருணாநிதியின் உருவச் சிலையை திறந்துவைத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.

அண்ணா அறிவாலயம், முரசொலி வளாகம், ஈரோடு, சேலம், திருச்சி போன்ற இடங்களைத் தொடர்ந்து தற்போது திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் கருணாநிதி சிலையை திறந்துவைத்துள்ளோம்.

TN Opposition Leader and DMK Chief MK Stalin speaks about Hindi and Sanskrit  DMK Chief MK Stalin  MK Stalin speaks about Hindi and Sanskrit
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி சிலையை திறந்து வைத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

இப்படிக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் நகரிலும் கருணாநிதி சிலையைத் திறந்தாக வேண்டும். திறக்கப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

TN Opposition Leader and DMK Chief MK Stalin speaks about Hindi and Sanskrit  DMK Chief MK Stalin  MK Stalin speaks about Hindi and Sanskrit
இசைவிழாவில் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்த மு.க.ஸ்டாலின்

காரணம் எல்லா ஊர்களோடும் தன்னை இணைத்து, பிணைத்துக் கொண்டவர் கருணாநிதி. நாட்டில் முத்தமிழுக்கு தற்போது சோதனை வந்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளைப் புகுத்தி, நம் தாய் மொழியைச் சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்கொண்டாக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி சிலை திறப்பு

அந்த வல்லமை நிச்சயம் நம்முடைய தமிழுக்கு உண்டு. 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் தமிழை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்தாக வேண்டும். தமிழை முதலிடத்திற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.

முத்தமிழ்ப் பேரவையின் 40ஆம் ஆண்டு இசை விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தொடர்ந்து முத்தமிழ்ப் பேரவை சார்பில் விருதுகள் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:

கருணாநிதியின் உருவச் சிலையை திறந்துவைத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.

அண்ணா அறிவாலயம், முரசொலி வளாகம், ஈரோடு, சேலம், திருச்சி போன்ற இடங்களைத் தொடர்ந்து தற்போது திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் கருணாநிதி சிலையை திறந்துவைத்துள்ளோம்.

TN Opposition Leader and DMK Chief MK Stalin speaks about Hindi and Sanskrit  DMK Chief MK Stalin  MK Stalin speaks about Hindi and Sanskrit
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி சிலையை திறந்து வைத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

இப்படிக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் நகரிலும் கருணாநிதி சிலையைத் திறந்தாக வேண்டும். திறக்கப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

TN Opposition Leader and DMK Chief MK Stalin speaks about Hindi and Sanskrit  DMK Chief MK Stalin  MK Stalin speaks about Hindi and Sanskrit
இசைவிழாவில் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்த மு.க.ஸ்டாலின்

காரணம் எல்லா ஊர்களோடும் தன்னை இணைத்து, பிணைத்துக் கொண்டவர் கருணாநிதி. நாட்டில் முத்தமிழுக்கு தற்போது சோதனை வந்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளைப் புகுத்தி, நம் தாய் மொழியைச் சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்கொண்டாக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி சிலை திறப்பு

அந்த வல்லமை நிச்சயம் நம்முடைய தமிழுக்கு உண்டு. 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் தமிழை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்தாக வேண்டும். தமிழை முதலிடத்திற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.

Intro:Body:இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளைப் புகுத்தி நம் தாய்மொழியை சிதைக்க ஓரு கூட்டம் முயற்ச்சி செய்து வருகிறது - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

முத்தமிழ்ப் பேரவையின் 40ம் ஆண்டு இசை விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் ராஜரத்தினம் கலையரங்கில் நடைப்பெற்றது. இந்த நிகழவை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்து திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையையும்  திறந்து வைத்தார்
அதனை தொடர்ந்து முத்தமிழ்ப் பேரவை சார்பில் விருதுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

 திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கும் இந்தப் பேரவையில், தலைவர் கலைஞர் அவர்கள்  உருவாக்கித் தந்திருக்கும் திருவாவடுதுறை  ராஜரத்தினம் கலையரங்கில், தலைவர் கலைஞர் அவர்களின்  மருமகன் திரு. அமிர்தம் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையை நான் திறந்துவைத்திருக்கிறேன். இது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்றாக  அமைந்திருக்கிறது என்று சொன்னால், அது நிச்சயம் மிகை ஆகாது என தெரிவித்தார்.. 

தொடர்ந்து அவர் பேசுகையில் அண்ணா அறிவாலயம், முரசொலி வளாகம், ஈரோடு, சேலம், திருச்சி போன்ற இடங்களை தொடர்ந்து தற்போது திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் தலைவர் கருணாநிதி சிலை திறந்து வைத்துள்ளோம்.

இப்படிக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் நகரிலும் கலைஞர் சிலையைத் திறந்தாக வேண்டும். திறக்கப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. காரணம்  எல்லா ஊர்களோடும் தன்னை இணைத்து, பிணைத்துக் கொண்டவர் தலைவர் கலைஞர் அவர்கள் என தெரிவித்தார்.

நாட்டில் முத்தமிழுக்கு தற்போது சோதனை வந்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளைப் புகுத்தி, நம் தாய் மொழியைச் சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்கொண்டாக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். அந்த வல்லமை நிச்சயம் நம்முடைய தமிழுக்கு உண்டு. “தமிழுக்கு அமுதென்று பேர்”என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் தமிழை
மேம்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்தாக வேண்டும்.  தமிழை முதலிடத்திற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும் என பேசினார். Conclusion:
Last Updated : Jan 4, 2020, 2:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.