சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீா்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்துப் பேசுவதற்காக, தமிழ்நாடு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் நேற்று (பிப்ரவரி 3) சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்குச் சென்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு நீா்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று அவரை நேரில் சந்தித்தார். முல்லைப்பெரியாறு அணை குறித்து பேசப்பட்டதா, வேறு ஏதேனும் பேசப்பட்டதா? என்பது குறித்து இன்னும் எந்தத் தகவலும் தெரியவில்லை, அமைச்சர் வருகைக்குப் பின்னரே தெரியும்.
இதையும் படிங்க: 'நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல!'