ETV Bharat / city

கரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Aug 11, 2020, 6:22 PM IST

Updated : Aug 11, 2020, 8:00 PM IST

corona
corona

17:56 August 11

கரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 5ஆயிரத்து 834 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 6ஆயிரத்து 5 பேர் குணமடைந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்றைய (ஆகஸ்ட் 11) கரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 834 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரத்து 814 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 20 பேர் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

தற்போது தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 986 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஐந்தாவது நாளாக ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  

மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 107ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக 118 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதில், அரசு மருத்துவமனையில் 71 பேரும், தனியார் மருத்துவமனையில் 47 பேரும் உயிரிழந்தனர்.  இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 419ஆக அதிகரித்துள்ளது. 

இன்று, 6 ஆயிரத்து 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680ஆக உயர்ந்துள்ளது.  இன்றைய நிலவரப்படி 52 ஆயிரத்து 810 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாநிலத்தில் 65 ஆயிரத்து 490 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32 லட்சத்து 40 ஆயிரத்து 339 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் 61 அரசு பரிசோதனை மையங்கள், 70 தனியார் மையங்கள் என மொத்தம் 131 ஆய்வகங்கள் உள்ளன. 

மாவட்ட வாரியாக பாதிப்பு

  • சென்னை - 1,11,054
  • செங்கல்பட்டு - 18,735
  • திருவள்ளூர் - 17706
  • காஞ்சிபுரம் - 12,470
  • மதுரை - 12195
  • விருதுநகர் - 10377
  • தூத்துக்குடி - 9469
  • தேனி - 8554
  • திருவண்ணாமலை - 8153
  • வேலூர் - 7546
  • ராணிப்பேட்டை - 7487
  • கோயம்புத்தூர் - 7296
  • திருநெல்வேலி - 6801
  • கன்னியாகுமரி - 6746
  • திருச்சிராப்பள்ளி - 5250
  • கடலூர் - 5344
  • சேலம் - 4951
  • விழுப்புரம் - 4713
  • கள்ளக்குறிச்சி - 4639
  • தஞ்சாவூர் - 4346
  • திண்டுக்கல் - 4204
  • ராமநாதபுரம் - 3719
  • புதுக்கோட்டை - 3388
  • தென்காசி - 3382
  • சிவகங்கை - 3053
  • திருவாரூர் - 2113
  • திருப்பத்தூர் - 1726
  • கிருஷ்ணகிரி - 1523
  • அரியலூர் - 1432
  • நாகப்பட்டினம் - 1249
  • திருப்பூர் - 1233
  • ஈரோடு - 1115
  • நாமக்கல் - 1033
  • நீலகிரி - 967
  • தருமபுரி - 906
  • கரூர் - 848
  • பெரம்பலூர் - 789
     
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 863
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 709
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுமி: 23ஆவது மாடியில் சாகசம்

17:56 August 11

கரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 5ஆயிரத்து 834 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 6ஆயிரத்து 5 பேர் குணமடைந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்றைய (ஆகஸ்ட் 11) கரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 834 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரத்து 814 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 20 பேர் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

தற்போது தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 986 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஐந்தாவது நாளாக ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  

மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 107ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக 118 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதில், அரசு மருத்துவமனையில் 71 பேரும், தனியார் மருத்துவமனையில் 47 பேரும் உயிரிழந்தனர்.  இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 419ஆக அதிகரித்துள்ளது. 

இன்று, 6 ஆயிரத்து 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680ஆக உயர்ந்துள்ளது.  இன்றைய நிலவரப்படி 52 ஆயிரத்து 810 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாநிலத்தில் 65 ஆயிரத்து 490 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32 லட்சத்து 40 ஆயிரத்து 339 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் 61 அரசு பரிசோதனை மையங்கள், 70 தனியார் மையங்கள் என மொத்தம் 131 ஆய்வகங்கள் உள்ளன. 

மாவட்ட வாரியாக பாதிப்பு

  • சென்னை - 1,11,054
  • செங்கல்பட்டு - 18,735
  • திருவள்ளூர் - 17706
  • காஞ்சிபுரம் - 12,470
  • மதுரை - 12195
  • விருதுநகர் - 10377
  • தூத்துக்குடி - 9469
  • தேனி - 8554
  • திருவண்ணாமலை - 8153
  • வேலூர் - 7546
  • ராணிப்பேட்டை - 7487
  • கோயம்புத்தூர் - 7296
  • திருநெல்வேலி - 6801
  • கன்னியாகுமரி - 6746
  • திருச்சிராப்பள்ளி - 5250
  • கடலூர் - 5344
  • சேலம் - 4951
  • விழுப்புரம் - 4713
  • கள்ளக்குறிச்சி - 4639
  • தஞ்சாவூர் - 4346
  • திண்டுக்கல் - 4204
  • ராமநாதபுரம் - 3719
  • புதுக்கோட்டை - 3388
  • தென்காசி - 3382
  • சிவகங்கை - 3053
  • திருவாரூர் - 2113
  • திருப்பத்தூர் - 1726
  • கிருஷ்ணகிரி - 1523
  • அரியலூர் - 1432
  • நாகப்பட்டினம் - 1249
  • திருப்பூர் - 1233
  • ஈரோடு - 1115
  • நாமக்கல் - 1033
  • நீலகிரி - 967
  • தருமபுரி - 906
  • கரூர் - 848
  • பெரம்பலூர் - 789
     
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 863
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 709
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுமி: 23ஆவது மாடியில் சாகசம்

Last Updated : Aug 11, 2020, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.