ETV Bharat / city

'இந்தியா சர்வாதிகார நாடு அல்ல' - திருநாவுக்கரசர் எம்.பி.

author img

By

Published : Dec 18, 2019, 10:01 AM IST

சென்னை: இந்தியா சர்வாதிகார நாடு அல்ல என்றும்; அரசு தவறு செய்யும் போது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தான் செய்வார்கள் என்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

Thirunavukkarasar MP byte in Chennai
Thirunavukkarasar MP byte in Chennai

சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், " பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு விரோதமானதாகவும் இந்தச் சட்டத்தில் மதத்தை புகுத்தி, இஸ்லாமியர்களை தவிர்த்தும் உள்ளனர். தமிழ்நாட்டிற்கு வந்து 35 ஆண்டுகளாக தங்கியிருந்து 3 தலைமுறையைக் கண்ட இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " மியான்மர் உள்பட இந்தியாவை ஒட்டி உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களிடம் மதத்தையும், மொழியையும் சாதியையும் புகுத்தக் கூடாது. பிரித்து ஆளக்கூடிய வகையில் சட்டம் இருப்பதால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்டப் போராடுகிறார்கள். இதைக் காங்கிரஸ் கட்சி தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை. அரசுக்கு எதிரான விசயங்களில் மென்மையாக கையாள வேண்டும். மாணவர்கள் மீது தடியடி நடத்துவதோ, வன்முறையை திணிப்பதோ தீர்வாகாது. இந்தியா சர்வாதிகார நாடு அல்ல" என்று கூறினார்.

சென்னையில் திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

மேலும், "அரசு தவறு செய்யும் போது அதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அரசு தவறுகளை திருத்திக் கொள்ளாத போது நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டியிருக்கும். 9 மாவட்டங்களில் தவறு இருந்ததால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடுத்தது. திமுக, காங்கிரஸ் உள்பட எல்லாக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதனால் தள்ளி போட வேண்டிய முயற்சி கிடையாது.
இரண்டு நாளில் இறுதிப் பட்டியல் வெளியாகும் போது, யார் போட்டியிடுவது என்பது தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

டெல்லியில் ஓபிஎஸ்; நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு!

சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், " பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு விரோதமானதாகவும் இந்தச் சட்டத்தில் மதத்தை புகுத்தி, இஸ்லாமியர்களை தவிர்த்தும் உள்ளனர். தமிழ்நாட்டிற்கு வந்து 35 ஆண்டுகளாக தங்கியிருந்து 3 தலைமுறையைக் கண்ட இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " மியான்மர் உள்பட இந்தியாவை ஒட்டி உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களிடம் மதத்தையும், மொழியையும் சாதியையும் புகுத்தக் கூடாது. பிரித்து ஆளக்கூடிய வகையில் சட்டம் இருப்பதால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்டப் போராடுகிறார்கள். இதைக் காங்கிரஸ் கட்சி தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை. அரசுக்கு எதிரான விசயங்களில் மென்மையாக கையாள வேண்டும். மாணவர்கள் மீது தடியடி நடத்துவதோ, வன்முறையை திணிப்பதோ தீர்வாகாது. இந்தியா சர்வாதிகார நாடு அல்ல" என்று கூறினார்.

சென்னையில் திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

மேலும், "அரசு தவறு செய்யும் போது அதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அரசு தவறுகளை திருத்திக் கொள்ளாத போது நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டியிருக்கும். 9 மாவட்டங்களில் தவறு இருந்ததால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடுத்தது. திமுக, காங்கிரஸ் உள்பட எல்லாக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதனால் தள்ளி போட வேண்டிய முயற்சி கிடையாது.
இரண்டு நாளில் இறுதிப் பட்டியல் வெளியாகும் போது, யார் போட்டியிடுவது என்பது தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

டெல்லியில் ஓபிஎஸ்; நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு!

Intro:சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுபினர் திருநாவுகரசர் பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுபினர் திருநாவுகரசர் பேட்டி

பா.ஜ.க. அரசால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த சட்டம் சிறுபான்மை மக்களுக்கு விரோதமானது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் இருந்து அகதிகள் வந்துள்ளனர். இந்த சட்டத்தில் மதத்தை புகுத்தி இஸ்லாமியர்களை தவிர்த்து உள்ளனர்.

தமிழகத்திற்கு வந்து 35 ஆண்டுகளாக தங்கியிருந்து 3 தலைமுறையை கண்டு உள்ளனர். முகாம்களில் குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் தங்கி உள்ளனர். இவர்கள் இலங்கைக்கு திரும்பி செல்ல விரும்பவில்லை. இவர்களுக்கு குடியுரிமை தரமாட்டேன் என்று கூறுவது நியாயமில்லை. அவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.

பர்மா, மியான்மர் உள்பட இந்தியாவை ஒட்டி உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களுக்கு நாட்டு, மத வித்தியாசம் இல்லாமல் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் மதத்தையும், மொழியையும் ஜாதியையும் புகுத்த கூடாது. பிரித்து ஆளக்கூடிய வகையில் சட்டம் இருப்பதால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள். மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்ட போராடுகிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சி தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை. அரசியல் கட்சிகள் தூண்டிவிடும் போராட்டங்கள் பல நாள் நடக்காது. மக்கள், இளைஞர்கள் தாங்களாகவே முன் வந்து போராடுகிறார்கள். அரசுக்கு எதிரான விசயங்களில் மென்மையாக கையாள வேண்டும். மாணவர்கள் மீது தடியடி நடத்துவதோ, துப்பாக்கி சுடுவதோ தாக்குதல் நடத்துவது இந்தியா சர்வாதிகார நாடு அல்ல. பிரச்சனை என்றால் அழைத்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். போராடுபவர்கள் மீது வன்முறையை திணிப்பது தீர்வாகாது.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் சொந்த நாட்டிற்கு போக விரும்பவில்லை. தமிழகத்துடன் தொடர்புடையவர்கள் தான் வந்துள்ளனர். ஒராண்டு இல்லை 30, 40 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளனர். விருப்பப்படுகிறவர்கள் போகலாம்.

ஒரு அரசு தவறு செய்யும் போது அதை எதிர்கட்சிகள் விமர்சன செய்யவோ குறை சொல்லவோ தான் செய்வார்கள். அரசு மாற்றி கொள்ளாத போது தவ்றுகளை திருத்தி கொள்ளாத போது நீதிமன்றத்தை தான் நாட வேண்டியிருக்கும். 9 மாவட்டங்களில் தவறு இருந்ததால் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடுத்தது. திமுக, காங்கிரஸ் உள்பட கட்சிகள் நீதிமன்றத்தில் பரிகாரம் காண தான் செல்கின்றன. திமுக, காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. தள்ளி போட வேண்டிய முயற்சி கிடையாது. மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெறுவோம்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 2 நாளில் இறுதி பட்டியல் வெளியாகும் போது யார் போட்டியிடுவது என்பது தெரிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.