ETV Bharat / city

உள்ளாட்சி உங்களாட்சி 5 - கிராமசபையின் பங்கு

author img

By

Published : Nov 26, 2019, 3:10 PM IST

உள்ளாட்சி உங்களாட்சியில் கிராமசபையின் பங்கு குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

உள்ளாட்சி உங்களாட்சி
உள்ளாட்சி உங்களாட்சி 5


தமிழ்நாட்டில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பில் கிராமசபையின் பங்கு முக்கியமானது. தமிழ்நாடு அரசுக்கு சட்டமன்றம் எப்படியோ, அப்படி ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம சபை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட ஊராட்சியின் மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் ஊராட்சி மன்ற கூட்டம் என்றால் மக்களால் நடத்தப்படும் கூட்டம் கிராம சபைக் கூட்டம். இந்த கூட்டமானது வருடத்திற்கு நான்கு நாட்கள் நடைபெறும்.

கூட்டம் நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு அதுகுறித்த அறிவிப்பையும், அதில் விவாதிக்கப்படவுள்ள சாராம்சத்தையும் கிராம மக்களுக்கு ஊராட்சித் தலைவரோ இல்லை ஊராட்சி எழுத்தரோ அறிவிக்க வேண்டும். அப்படி, கிராம சபையைக் கூட்ட ஊராட்சித் தலைவர் மறுத்தால், தங்களுக்கு என ஒரு தலைவரை மக்கள் நியமித்து சிறப்பு கிராம சபையைக் கூட்டலாம். இந்த சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை அவர்கள் வைக்க வேண்டும்.

கிராம சபைக் கூட்டத்தில் தங்களது ஊராட்சியின் நலன் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். முக்கியமாக இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் மக்களால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுபவை. இதனால், இதில் பெரும்பாலான மக்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் தங்களின் தேவைகள் என்ன, எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதை உண்மையாக உணர முடியும்.

தீர்மானங்களை நிறைவேற்றுவது மட்டுமின்றி அந்தத் தீர்மானங்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கையாக அனுப்ப வேண்டும். அந்த கோரிக்கைகள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்படி எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் அனைவரும் இணைந்து ஜனநாயக முறைப்படி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, தீர்மானத்தை நிறைவேற்றியும், அதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை இணைத்து ஊரக வளர்ச்சித் துறைக்கு தெரியப்படுத்த வேண்டியது என்பது அவசியம். மேலும், எந்தத் திட்டத்தின் மூலம் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கிராமசபையில் மக்களின் ஆய்வுக்கு, காலாண்டுக்கான வரவு - செலவு கணக்குகள், மத்திய, மாநில அரசுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள், ஊராட்சி நிதி நிலை அறிக்கை, நூறு நாள் வேலை தொடர்பான கணக்குகள் மற்றும் அறிக்கைகள் உள்ளிட்டவை வைக்கப்படும். இதை மக்கள் ஆய்வு செய்து தங்களுக்குத் தேவையானவற்றை தெரிந்துகொள்ளலாம்.

வாக்களித்த மக்கள் சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பதை நேரலையில்கூட பார்க்க முடியாத சூழல் இருக்கும் நிலையில், வாக்களித்த மக்களே கிராம சபையை (தங்களுக்கான சட்டசபை) கூட்டி தங்களின் நன்மை குறித்தும், எதிர்கால திட்டம் குறித்தும் தாங்களே விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் இந்த கிராம சபை முக்கியமான ஒன்று.

இதையும் படிங்க:

உள்ளாட்சி உங்களாட்சி 4 - ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு


தமிழ்நாட்டில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பில் கிராமசபையின் பங்கு முக்கியமானது. தமிழ்நாடு அரசுக்கு சட்டமன்றம் எப்படியோ, அப்படி ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம சபை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட ஊராட்சியின் மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் ஊராட்சி மன்ற கூட்டம் என்றால் மக்களால் நடத்தப்படும் கூட்டம் கிராம சபைக் கூட்டம். இந்த கூட்டமானது வருடத்திற்கு நான்கு நாட்கள் நடைபெறும்.

கூட்டம் நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு அதுகுறித்த அறிவிப்பையும், அதில் விவாதிக்கப்படவுள்ள சாராம்சத்தையும் கிராம மக்களுக்கு ஊராட்சித் தலைவரோ இல்லை ஊராட்சி எழுத்தரோ அறிவிக்க வேண்டும். அப்படி, கிராம சபையைக் கூட்ட ஊராட்சித் தலைவர் மறுத்தால், தங்களுக்கு என ஒரு தலைவரை மக்கள் நியமித்து சிறப்பு கிராம சபையைக் கூட்டலாம். இந்த சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை அவர்கள் வைக்க வேண்டும்.

கிராம சபைக் கூட்டத்தில் தங்களது ஊராட்சியின் நலன் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். முக்கியமாக இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் மக்களால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுபவை. இதனால், இதில் பெரும்பாலான மக்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் தங்களின் தேவைகள் என்ன, எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதை உண்மையாக உணர முடியும்.

தீர்மானங்களை நிறைவேற்றுவது மட்டுமின்றி அந்தத் தீர்மானங்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கையாக அனுப்ப வேண்டும். அந்த கோரிக்கைகள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்படி எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் அனைவரும் இணைந்து ஜனநாயக முறைப்படி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, தீர்மானத்தை நிறைவேற்றியும், அதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை இணைத்து ஊரக வளர்ச்சித் துறைக்கு தெரியப்படுத்த வேண்டியது என்பது அவசியம். மேலும், எந்தத் திட்டத்தின் மூலம் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கிராமசபையில் மக்களின் ஆய்வுக்கு, காலாண்டுக்கான வரவு - செலவு கணக்குகள், மத்திய, மாநில அரசுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள், ஊராட்சி நிதி நிலை அறிக்கை, நூறு நாள் வேலை தொடர்பான கணக்குகள் மற்றும் அறிக்கைகள் உள்ளிட்டவை வைக்கப்படும். இதை மக்கள் ஆய்வு செய்து தங்களுக்குத் தேவையானவற்றை தெரிந்துகொள்ளலாம்.

வாக்களித்த மக்கள் சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பதை நேரலையில்கூட பார்க்க முடியாத சூழல் இருக்கும் நிலையில், வாக்களித்த மக்களே கிராம சபையை (தங்களுக்கான சட்டசபை) கூட்டி தங்களின் நன்மை குறித்தும், எதிர்கால திட்டம் குறித்தும் தாங்களே விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் இந்த கிராம சபை முக்கியமான ஒன்று.

இதையும் படிங்க:

உள்ளாட்சி உங்களாட்சி 4 - ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு

Intro:Body:

kerama sabai -SPL


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.