ETV Bharat / city

பயணங்கள் தொடரும்...! அடடே ஓ.பி.எஸ்.!

author img

By

Published : Nov 19, 2019, 3:39 AM IST

சென்னை: பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

The missions will continue says TN Deputy Cm OPS

துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத்தும் சென்றிருந்தார். இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸூக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கடந்த 10 தினங்களாக அமெரிக்காவிலுள்ள சிகாகோ உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்து பேசினேன். அப்போது அவர்களிடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளார்கள்.

அந்த அடிப்படையில் அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உதவிகரமாகவும், வெற்றிக்கரமாகவும் நடந்துள்ளதை கூறுகிறேன். உலக வங்கி தமிழ்நாட்டின் வீட்டு வசதி, போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்களுக்கு உரிய நிதியை தரவேண்டும் என்று சுமூகமாக பேச்சு நடந்தது. முதல்கட்டமாக வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

அமெரிக்கவாழ் இந்தியர்களும், அமெரிக்கர்களும் அன்பான வரவேற்பு, உபசரிப்பை அளித்தார்கள். இது மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில் எவ்வகையான தொழில் நுட்பத்தில் வீடு கட்டுகிறார்கள், திட்ட மதிப்பு என்ன? என்பதையும் கேட்டு வந்தேன் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், 'அமெரிக்காவில் கடும்குளிர் இருந்ததால், கோர்ட் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் மூன்று நாட்கள் வேட்டியில் தான் இருந்தேன்' என்றார்.

பயணம் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் , “பயணங்கள் தொடரும்''..! என்று புன்னகைத்தார்.

மேலும் தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது குறித்து கேட்டதற்கு, அதிர்ஷ்டம் காரணமாக எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்துவிட்டார் என்ற ரஜினிகாந்தின் பேச்சை கண்டிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை : ஒ.பி.எஸ். உறுதி..!

துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத்தும் சென்றிருந்தார். இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸூக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கடந்த 10 தினங்களாக அமெரிக்காவிலுள்ள சிகாகோ உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்து பேசினேன். அப்போது அவர்களிடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளார்கள்.

அந்த அடிப்படையில் அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உதவிகரமாகவும், வெற்றிக்கரமாகவும் நடந்துள்ளதை கூறுகிறேன். உலக வங்கி தமிழ்நாட்டின் வீட்டு வசதி, போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்களுக்கு உரிய நிதியை தரவேண்டும் என்று சுமூகமாக பேச்சு நடந்தது. முதல்கட்டமாக வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

அமெரிக்கவாழ் இந்தியர்களும், அமெரிக்கர்களும் அன்பான வரவேற்பு, உபசரிப்பை அளித்தார்கள். இது மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில் எவ்வகையான தொழில் நுட்பத்தில் வீடு கட்டுகிறார்கள், திட்ட மதிப்பு என்ன? என்பதையும் கேட்டு வந்தேன் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், 'அமெரிக்காவில் கடும்குளிர் இருந்ததால், கோர்ட் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் மூன்று நாட்கள் வேட்டியில் தான் இருந்தேன்' என்றார்.

பயணம் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் , “பயணங்கள் தொடரும்''..! என்று புன்னகைத்தார்.

மேலும் தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது குறித்து கேட்டதற்கு, அதிர்ஷ்டம் காரணமாக எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்துவிட்டார் என்ற ரஜினிகாந்தின் பேச்சை கண்டிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை : ஒ.பி.எஸ். உறுதி..!

Intro:Body:*********துணை முதல்வர் பெற்ற பட்டங்கள், விருதுகளை மட்டும் வெப் கார்டு போடவும்************


அரசு முறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்கா சென்ற தமிழக துணை முதல்வர் இன்று சென்னை வந்தடைந்தார்.


தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்க்டன் டிசி ஆகிய நகரங்களுக்கு கடந்த 8 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி (இன்று) வரை 10 நாட்கள் பயணமாக சென்றார். தமிழகத்துக்கு புதிய திட்டங்களுக்கான நிதி பெறுவது குறித்து உலக வங்கி தெற்காசிய பிரிவு அதிகாரிகளிடம் விவாதிக்கவும், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் குறித்து பல முக்கிய நிதி நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்தல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்ந்த திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக அவர் வெளிநாடு சென்றார். அவருடன் தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன், தேனி எம் பி ரவீந்திரநாத் ஆகியோர் சென்றிருந்தனர்.



கடந்த 9 ஆம் தேதி சிகாகோ நகரில் உலக தமிழ் சங்கள் சார்பில் 'தங்க தமிழ் மகன்' விருது வழங்கப்பட்டது.

11 ஆம் தேதி சிகாகோ நகரில் அமெரிக்க பல இந கூட்டமைப்பு சார்பில் நடந்த விழாவில் 'சர்வதேச வளரும் நட்சத்திரம்' (குளோபல் ரைசிங் ஸ்டார்) விருது

12 ஆம் தேதி நேபர்வள்ளியில் உள்ள 'மெட்ரோபாலிட்டன் ஆசியா பேமிலி சர்வீஸ்' மையத்தின் சார்பில் 'மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸலன்ஸ்' விருது

12 ஆம் தேதி சிகாகோ குளோபல் ஸ்ட்ராஜெடிக் அல்லையன்ஸ் உதவியுடன் தமிழக உறைவிட நிதிக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

14 ஆம் தேதி 'தனி சிறப்பு மிக்க பொது சேவை ஆற்றும் சாதனையாளர் விருது', அமெரிக்க - இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பு தலைமை செயல் அலுவலரால் வழங்கப்பட்டது.

ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் சொசைட்டி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடந்த விழாவில், டெக்சாஸின் ஃபேர்லாண்ட் மேயர் டாம்ரிட், நவம்பர் 14 ஆம் தினத்தை ‘O.P.S. DAY’ (ஓ.பி.எஸ். நாள்) என்று அறிவித்து கவுரவப்படுத்தினார்.

ஸ்ரீ பதமினி ரங்கநாதன் டிரஸ்ட் சார்பில் ' பண்பின் சிகரம்' என்ற பட்டமும், மெட்ரோபிளெக்ஸ் தமிழ் சங்கம் சார்பில் 'வீரத்தமிழன்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

15 ஆம் தேதி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் ஆய்வு இருக்கை' அமைக்க தனது சொந்த பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்குவதாக துணை முதல்வர் அறிவிப்பு

18 ஆம் தேதி இரவு சென்னை திரும்பினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.