சென்னை: தலைமைச்செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 5 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விதமாக 3 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
மேலும், 2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 ஹஜ் பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மானியத்தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.27,628 வீதம், மொத்தம் 4.56 கோடி ரூபாய் வழங்கும் விதமாக, முதலமைச்சர் 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: "ஆர்டர்லி விவகாரம் - அரசிடம் இருந்து ஒரு வார்த்தை போதும், ஆனால் வருவதில்லை " - உயர் நீதிமன்றம்