ETV Bharat / city

பொங்கலுக்கு 29,213 பேருந்துகள் ஏற்பாடு - அமைச்சர் தகவல்!

author img

By

Published : Jan 7, 2020, 7:10 PM IST

சென்னை: பொங்கல் திருநாளுக்கு முன்பும் பின்பும் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பொங்கலுக்கு செல்ல மட்டும் 29,213 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

bus
bus

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “பொங்கல் திருநாளுக்கு சென்னையில் இருந்து பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்காக வரும் 12 முதல் 14 ஆம் தேதி வரையும், வெளியூர் செல்லும் மக்கள் திரும்பி வருவதற்காக 16 முதல் 19 ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் ஐந்து இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திராவிற்கும், கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கும், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டுக்கும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, ஓசூருக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரிலும் தற்காலிக பேருந்துகள் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

’அரசு பேருந்துகள் நல்ல தரத்துடன் அதிக எண்ணிக்கையில் உள்ளன’
’அரசு பேருந்துகள் நல்ல தரத்துடன் அதிக எண்ணிக்கையில் உள்ளன’

பொங்கலுக்கு செல்வதற்காக 29,213 பேருந்துகளும், திருநாளுக்குப் பின்பாக 25,488 பெருந்துகளும் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்காக 17 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு பேருந்துகள் நல்ல தரத்துடன் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், பொதுமக்கள் தனியார் பேருந்துகளை நாடிச் செல்ல வேண்டியதில்லை. தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

பொங்கலுக்கு 29,213 பேருந்துகள் ஏற்பாடு - அமைச்சர் தகவல்

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்ததன் காரணம் தெரியுமா?

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “பொங்கல் திருநாளுக்கு சென்னையில் இருந்து பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்காக வரும் 12 முதல் 14 ஆம் தேதி வரையும், வெளியூர் செல்லும் மக்கள் திரும்பி வருவதற்காக 16 முதல் 19 ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் ஐந்து இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திராவிற்கும், கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கும், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டுக்கும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, ஓசூருக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரிலும் தற்காலிக பேருந்துகள் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

’அரசு பேருந்துகள் நல்ல தரத்துடன் அதிக எண்ணிக்கையில் உள்ளன’
’அரசு பேருந்துகள் நல்ல தரத்துடன் அதிக எண்ணிக்கையில் உள்ளன’

பொங்கலுக்கு செல்வதற்காக 29,213 பேருந்துகளும், திருநாளுக்குப் பின்பாக 25,488 பெருந்துகளும் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்காக 17 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு பேருந்துகள் நல்ல தரத்துடன் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், பொதுமக்கள் தனியார் பேருந்துகளை நாடிச் செல்ல வேண்டியதில்லை. தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

பொங்கலுக்கு 29,213 பேருந்துகள் ஏற்பாடு - அமைச்சர் தகவல்

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்ததன் காரணம் தெரியுமா?

Intro:பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு


Body:சென்னை,
பொங்கல் பண்டிகைக்கு சென்னை மற்றும் முக்கிய ஊர்களிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையும், அதேபோல் பிற ஊர்களில் இருந்து சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு திரும்புவதற்கு 16 ந் தேதி முதல் 19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்காக வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தின் முக்கிய பகுதிகளான திருப்பூர், கோயம்புத்தூர், , பெங்களூரில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து பத்தாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திராவிற்கும், கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி மற்றும் கடலூர் சிதம்பரம் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் தஞ்சாவூர்,பண்ருட்டி விக்கிரவாண்டி வழியாக செல்லும் பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை போளூர் சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் ஆரணி ஆற்காடு ஓசூர் செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம் வேளாங்கண்ணி திருச்சி மதுரை திருநெல்வேலி செங்கோட்டை தூத்துக்குடி விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.


பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகளில் முன் பதிவு செய்வதற்காக 17 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வெளியூர் சென்ற மக்கள் திரும்பி வருவதற்காக 16ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அரசு பேருந்துகளை அதிக அளவில் உள்ளதாலும், நன்றாக உள்ளதால் பொதுமக்கள் தனியார் பேருந்துகளை நாடிச் செல்ல வேண்டியதில்லை. அவர்களை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.