ETV Bharat / city

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!

author img

By

Published : Mar 1, 2020, 7:27 PM IST

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பிற்கானப் பொதுத்தேர்வு நாளை தொடங்கவிருப்பதையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை அரசுத் தேர்வுத்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து செய்துள்ளது.

+2 வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது, 12th exam, 12th public exam, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
12th exam

2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை, தமிழ்நாடு, புதுச்சேரியில் 7,276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து, 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 19,166 பேரும் எழுதவுள்ளனர். இந்தத் தேர்விற்காக இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் உள்பட, தமிழ்நாடு, புதுச்சேரியில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ் வழியில் பயின்று எழுதவுள்ள 4,54,367 பேருக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாடங்களை மாணவர்கள் படிப்பதற்கு தேவையான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விடைத்தாளின் விவரங்கள் அடங்கிய முகப்புத் தாள் பிங்க் நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்காக சுமார் 41,500 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

'கோழைத்தனமான அரசியல்' - கெஜ்ரிவால் அரசை விளாசும் ஜேஎன்யு மாணவர் சங்கம்

வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். மேலும் 3,330 மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் உள்பட சலுகைகள் அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக 4,000 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படையினர் மாணவிகளைச் சோதனை செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரோஜா வனம் நிகழ்வின் மூலம் குஷ்பூ மூவருக்கு “சவால்“ விடுத்துள்ளார்!

பெண் தேர்வர்களைப் பெண் ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே சோதனை செய்ய வேண்டும். சந்தேகப்படும் தேர்வர்களை மட்டும் சோதனை செய்தால் போதும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வின்போது தேர்வு மைய வளாகத்திற்குள் கைப்பேசி எடுத்து வர தேர்வர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்குள் அந்தப் பள்ளியின் ஊழியர் யாரும் காலை 8:30 மணிக்கு மேல் இருக்க கூடாது எனவும், தேர்வு முடிந்து விடைத்தாள் கட்டுகள் சென்ற பின்னர்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

'எலி மருந்தை தடைசெய்ய அரசு பரிசீலனை' - அமைச்சர் விஜயபாஸ்கர்

தேர்வு அறைகளாக ஒதுக்கப்பட்ட பகுதியில் வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடை செய்யப்பட்ட பகுதி எனவும், தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அளிக்கப்படும் தண்டனை விவரங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுலவலகத்தில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள், சந்தேகங்களைத் தெரிவிக்க, முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை 9385494105, 9385494115, 9385494120 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை, தமிழ்நாடு, புதுச்சேரியில் 7,276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து, 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 19,166 பேரும் எழுதவுள்ளனர். இந்தத் தேர்விற்காக இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் உள்பட, தமிழ்நாடு, புதுச்சேரியில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ் வழியில் பயின்று எழுதவுள்ள 4,54,367 பேருக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாடங்களை மாணவர்கள் படிப்பதற்கு தேவையான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விடைத்தாளின் விவரங்கள் அடங்கிய முகப்புத் தாள் பிங்க் நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்காக சுமார் 41,500 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

'கோழைத்தனமான அரசியல்' - கெஜ்ரிவால் அரசை விளாசும் ஜேஎன்யு மாணவர் சங்கம்

வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். மேலும் 3,330 மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் உள்பட சலுகைகள் அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக 4,000 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படையினர் மாணவிகளைச் சோதனை செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரோஜா வனம் நிகழ்வின் மூலம் குஷ்பூ மூவருக்கு “சவால்“ விடுத்துள்ளார்!

பெண் தேர்வர்களைப் பெண் ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே சோதனை செய்ய வேண்டும். சந்தேகப்படும் தேர்வர்களை மட்டும் சோதனை செய்தால் போதும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வின்போது தேர்வு மைய வளாகத்திற்குள் கைப்பேசி எடுத்து வர தேர்வர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்குள் அந்தப் பள்ளியின் ஊழியர் யாரும் காலை 8:30 மணிக்கு மேல் இருக்க கூடாது எனவும், தேர்வு முடிந்து விடைத்தாள் கட்டுகள் சென்ற பின்னர்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

'எலி மருந்தை தடைசெய்ய அரசு பரிசீலனை' - அமைச்சர் விஜயபாஸ்கர்

தேர்வு அறைகளாக ஒதுக்கப்பட்ட பகுதியில் வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடை செய்யப்பட்ட பகுதி எனவும், தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அளிக்கப்படும் தண்டனை விவரங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுலவலகத்தில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள், சந்தேகங்களைத் தெரிவிக்க, முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை 9385494105, 9385494115, 9385494120 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.