ETV Bharat / city

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் - சுகாதாரத் துறை செயலர் ஆய்வு

author img

By

Published : Jan 29, 2020, 5:11 PM IST

Updated : Mar 17, 2020, 5:06 PM IST

சென்னை: விமான நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

ministry
ministry

சீனாவில் கரோனா எனப்படும் ஆட்கொல்லி வைரஸ் நோய் பரவி ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னைக்கு சீனாவிலிருந்து நேரிடையாக விமான சேவை இல்லாததால், ஹாங்காங்கில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை வரும் விமானப் பயணிகளை கண்காணிக்க, பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள நோய் தடுப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று ஆய்வு செய்தார். அவருடன் விமான நிலைய ஆணையரக இயக்குநர் (பொறுப்பு) தீபக், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, குடியுரிமை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, விமானத்திலிருந்து பயணிகள் இறங்கியதும், அவர்கள் கை வைக்கும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டுமெனவும், அனைவருக்கும் முக கவசம் வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சீனா மற்றும் சீனாவிலிருந்து பிற நாடுகள் வழியாக வரும்போது, விமானத்திலேயே பயணிகளிடம் சுய கடிதம் தரப்படும். அக்கடிதத்தில் நோய் அறிகுறியான காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருக்கிறதா என்பதை பயணிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்காக தனியாக 10 குடியுரிமைச் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியுரிமை அலுவலர்கள் உள்பட விமான நிலைய அலுவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் - சுகாதாரத்துறைச் செயலாளர் ஆய்வு

பயணிகளின் உடல் சூட்டை வைத்து ஸ்கேனிங் கருவி மூலம் கண்காணித்து அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர ஊர்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து சென்னை வந்த பயணிகள் கடந்த 5 நாட்களாக சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 15 ஆயிரம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். 10 சீனர்கள் உள்பட 68 பயணிகள் பொது இடங்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் “ என்றார்.

இதையும் படிங்க: வைரஸை தடுக்க 640 மில்லியன் டாலர் ஒதுக்கியது சீனா!

சீனாவில் கரோனா எனப்படும் ஆட்கொல்லி வைரஸ் நோய் பரவி ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னைக்கு சீனாவிலிருந்து நேரிடையாக விமான சேவை இல்லாததால், ஹாங்காங்கில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை வரும் விமானப் பயணிகளை கண்காணிக்க, பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள நோய் தடுப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று ஆய்வு செய்தார். அவருடன் விமான நிலைய ஆணையரக இயக்குநர் (பொறுப்பு) தீபக், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, குடியுரிமை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, விமானத்திலிருந்து பயணிகள் இறங்கியதும், அவர்கள் கை வைக்கும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டுமெனவும், அனைவருக்கும் முக கவசம் வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சீனா மற்றும் சீனாவிலிருந்து பிற நாடுகள் வழியாக வரும்போது, விமானத்திலேயே பயணிகளிடம் சுய கடிதம் தரப்படும். அக்கடிதத்தில் நோய் அறிகுறியான காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருக்கிறதா என்பதை பயணிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்காக தனியாக 10 குடியுரிமைச் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியுரிமை அலுவலர்கள் உள்பட விமான நிலைய அலுவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் - சுகாதாரத்துறைச் செயலாளர் ஆய்வு

பயணிகளின் உடல் சூட்டை வைத்து ஸ்கேனிங் கருவி மூலம் கண்காணித்து அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர ஊர்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து சென்னை வந்த பயணிகள் கடந்த 5 நாட்களாக சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 15 ஆயிரம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். 10 சீனர்கள் உள்பட 68 பயணிகள் பொது இடங்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் “ என்றார்.

இதையும் படிங்க: வைரஸை தடுக்க 640 மில்லியன் டாலர் ஒதுக்கியது சீனா!

Last Updated : Mar 17, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.