ETV Bharat / city

11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் மோடி! - மா. சுப்பிரமணியன் தகவல்

author img

By

Published : Jan 8, 2022, 6:15 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றபின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விருதுநகரில் நடைபெறும் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் மோடி பங்கேற்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

NEET oppose states will join together
NEET oppose states will join together

சென்னை: நீட் தேர்வை ரத்துசெய்ய இன்று (ஜனவரி 8) தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. அதில் பங்கேற்ற பின்னர் மா. சுப்பிரமணியன் செய்தியாளரிடம் பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது அவர், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுநர், உள் துறை அமைச்சரைச் சந்திக்கத் திட்டம் இருப்பதாகவும், நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்கவும் முடிவுசெய்துள்ளதாகவும் கூறினார்.

13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டு 13 கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நமது மாணவர்களைப் பெருமளவு பாதித்துள்ளது.

மத்திய அரசு மாநில அரசு மீது திணித்துள்ள நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது. பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும் இந்த நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதாக உள்ளது.

ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. உள் துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கோரியும் அவர் நேரம் அளிக்காதது மக்கள் ஆட்சி மாண்புகளுக்கு எதிரானது எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்தார்.

நீட் தேர்வை முழுமையாக நீக்கிட தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான ஏற்பாடு எம்மாதிரியானது என்பது சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து முடிவுசெய்யப்படும்.

'ஏ.கே. ராஜன் அறிக்கையின்படி' - நீட்டால் தமிழ்நாட்டு மாணவர் குறைவு

ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கையில் தமிழில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு முன்னாள் 17 விழுக்காடு இருந்தது. நீட் தேர்வுக்குப் பிறகு இரண்டு விழுக்காடாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் நீட் எதிர்ப்புணர்வு இல்லை; மற்ற மாநிலங்களிலும் நீட் எதிர்ப்பு நிலை உள்ளது. ஜனநாயக ரீதியாக பாஜகவின் கருத்து உள்ளது. மீண்டும் ஆளுநரையும், குடியரசுத் தலைவரையும் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் சந்திக்க வாய்ப்புள்ளது.

11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் மோடி!

மக்கள் மனத்தில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு கனன்றுகொண்டிருக்கிறது அதனை ஒருங்கிணைக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக உயர்த்த தற்போது அரசுக்கு எண்ணமில்லை.

மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பார்

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு தொடர்பான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.150.89 கோடி ஊக்கத்தொகை

சென்னை: நீட் தேர்வை ரத்துசெய்ய இன்று (ஜனவரி 8) தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. அதில் பங்கேற்ற பின்னர் மா. சுப்பிரமணியன் செய்தியாளரிடம் பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது அவர், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுநர், உள் துறை அமைச்சரைச் சந்திக்கத் திட்டம் இருப்பதாகவும், நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்கவும் முடிவுசெய்துள்ளதாகவும் கூறினார்.

13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டு 13 கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நமது மாணவர்களைப் பெருமளவு பாதித்துள்ளது.

மத்திய அரசு மாநில அரசு மீது திணித்துள்ள நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது. பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும் இந்த நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதாக உள்ளது.

ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. உள் துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கோரியும் அவர் நேரம் அளிக்காதது மக்கள் ஆட்சி மாண்புகளுக்கு எதிரானது எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்தார்.

நீட் தேர்வை முழுமையாக நீக்கிட தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான ஏற்பாடு எம்மாதிரியானது என்பது சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து முடிவுசெய்யப்படும்.

'ஏ.கே. ராஜன் அறிக்கையின்படி' - நீட்டால் தமிழ்நாட்டு மாணவர் குறைவு

ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கையில் தமிழில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு முன்னாள் 17 விழுக்காடு இருந்தது. நீட் தேர்வுக்குப் பிறகு இரண்டு விழுக்காடாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் நீட் எதிர்ப்புணர்வு இல்லை; மற்ற மாநிலங்களிலும் நீட் எதிர்ப்பு நிலை உள்ளது. ஜனநாயக ரீதியாக பாஜகவின் கருத்து உள்ளது. மீண்டும் ஆளுநரையும், குடியரசுத் தலைவரையும் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் சந்திக்க வாய்ப்புள்ளது.

11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் மோடி!

மக்கள் மனத்தில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு கனன்றுகொண்டிருக்கிறது அதனை ஒருங்கிணைக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக உயர்த்த தற்போது அரசுக்கு எண்ணமில்லை.

மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பார்

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு தொடர்பான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.150.89 கோடி ஊக்கத்தொகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.