ETV Bharat / city

' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்துகிறது ' - கே.எஸ். அழகிரி

author img

By

Published : Dec 5, 2019, 1:41 PM IST

உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் அதிமுக அரசு செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ks alagiri
ks alagiri

டெல்லி செல்லும் முன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,

’’ ப. சிதம்பரத்திற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக சிதம்பரத்தை பணிய வைக்க 106 நாட்கள் சிறையில் வைத்திருந்தார்கள். இந்த நாட்களில் 10 லட்சம் கேள்விகளைக் கேட்டிருந்தால் கூட சிதம்பரம் பதிலளித்திருப்பார். அவரிடம் கேள்வியும் கேட்க மறுக்கிறீர்கள். வெளியே விடவும் தயங்குகிறீர்கள் என்று கபில் சிபல் நீதிமன்றத்தில் கூறினார்.

ஆகவே, சர்வாதிகாரம் நீடித்ததாக வரலாறு கிடையாது. இந்த தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்திய 3 பேரில் சிதம்பரமும் ஒருவர். ஆனால், மோடி அரசு பொருளாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது ’’ என்று கூறினார்.மேலும்,

” உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது. தேர்தலை நடத்தாமல் இருக்க, சட்டத்தில் என்னென்ன ஓட்டைகளை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அதிமுக அரசு செய்துள்ளது. மறைமுகத் தேர்தல், ஆள் தூக்கும் தேர்தலாக முடியுமே தவிர, மக்களாட்சியாக இருக்காது.

சென்னை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி பேட்டி

புதிதாக 5 மாவட்டங்கள் தொடங்கப்பட்டு அவற்றில், தொகுதி வரையறை செய்யப்படவில்லை. அங்கே, மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார். ஆனால், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் இருக்க மாட்டார். புதிய மாவட்டங்களில் தொகுதிகள் தேர்வு செய்யப்படவில்லை என்றால், மத்திய அரசு அனுப்பும் பணம் புதிய மாவட்டங்களுக்கு எப்படிச் செல்லும். இதுபோன்ற சட்ட சிக்கல்களுடன் தேர்தலை நடத்த அரசு முயற்சிக்கிறது. இது தவறு என்பதால்தான் நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளது. தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவே திமுக போராடி வருகிறது ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தயார்' - துணை முதலமைச்சர்

டெல்லி செல்லும் முன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,

’’ ப. சிதம்பரத்திற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக சிதம்பரத்தை பணிய வைக்க 106 நாட்கள் சிறையில் வைத்திருந்தார்கள். இந்த நாட்களில் 10 லட்சம் கேள்விகளைக் கேட்டிருந்தால் கூட சிதம்பரம் பதிலளித்திருப்பார். அவரிடம் கேள்வியும் கேட்க மறுக்கிறீர்கள். வெளியே விடவும் தயங்குகிறீர்கள் என்று கபில் சிபல் நீதிமன்றத்தில் கூறினார்.

ஆகவே, சர்வாதிகாரம் நீடித்ததாக வரலாறு கிடையாது. இந்த தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்திய 3 பேரில் சிதம்பரமும் ஒருவர். ஆனால், மோடி அரசு பொருளாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது ’’ என்று கூறினார்.மேலும்,

” உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது. தேர்தலை நடத்தாமல் இருக்க, சட்டத்தில் என்னென்ன ஓட்டைகளை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அதிமுக அரசு செய்துள்ளது. மறைமுகத் தேர்தல், ஆள் தூக்கும் தேர்தலாக முடியுமே தவிர, மக்களாட்சியாக இருக்காது.

சென்னை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி பேட்டி

புதிதாக 5 மாவட்டங்கள் தொடங்கப்பட்டு அவற்றில், தொகுதி வரையறை செய்யப்படவில்லை. அங்கே, மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார். ஆனால், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் இருக்க மாட்டார். புதிய மாவட்டங்களில் தொகுதிகள் தேர்வு செய்யப்படவில்லை என்றால், மத்திய அரசு அனுப்பும் பணம் புதிய மாவட்டங்களுக்கு எப்படிச் செல்லும். இதுபோன்ற சட்ட சிக்கல்களுடன் தேர்தலை நடத்த அரசு முயற்சிக்கிறது. இது தவறு என்பதால்தான் நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளது. தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவே திமுக போராடி வருகிறது ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தயார்' - துணை முதலமைச்சர்

Intro:தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பது முதுமொழி. பா.ஜ.க. அரசு அரசியல் காரணங்களுக்காக ப.சிதம்பரத்தை பணிய வைக்க வேண்டும் என்பதற்காக 105 நாள் சிறையில் வைத்திருந்தார்கள். விசாரணை கைதியை 105 சிறையில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த 100 நாளில் 10 லட்சம் கேள்விகளை கேட்டியிருந்தால் கூட சிதம்பரம் பதிலளித்து இருப்பார். அவரிடம் கேள்வியும் கேட்க மறுக்கிறீர்கள். வெளியே விடவும் தயங்குகிறீர்கள் என்று கபில்சிபில் விரக்தியில் நீதிமன்றத்தில் கூறினார்.

சர்வாதிகாரம் நீடித்ததாக சரித்திரம் கிடையாது. பீனிக்ஸ் பறவையை போல சிதம்பரம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் வந்து உள்ளார். நிறைய பேசுவார். நிறைய எழுதுவார். இந்த தேசத்தின் பொருளாதார உயர்த்திய 3 பேரில் சிதம்பரம் ஒருவர். ராஜீவ்காந்தி தலைமையில் நரசிம்மராவ், மன்மோகன்சிங், சிதம்பரம் ஆகியோர் தான் பொருளாதாரத்தை உயர்த்தினார்கள். ஆனால் மோடி பொருளாதாரத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறார். இதை சரி செய்ய சிதம்பரம் வருகிறார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்று தமிழக அரசு இருக்கிறது. தேர்தலை நடத்தாமல் இருக்க சட்டத்தில் என்ன என்ன ஒட்டைகளை செய்ய முடியுமோ அவற்றை செய்துள்ளனர். மறைமுக தேர்தல் ஆட்களை தூக்கும் தேர்தலாக முடியுமே ஒழிய மக்களாட்சி இருக்காது. மக்களின் நேரிடையாக இல்லாத எந்த தேர்தலும் மக்கள் பங்களிப்பு இருக்கிற தேர்தலாக இருக்க முடியாது.

புதிதாக 6 மாவட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. புதிய மாவட்டங்களில் தொகுதி வரையுரை செய்யப்படவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார். ஆனால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் இருக்க மாட்டார். புதிய மாவட்டங்களில் தொகுதிகள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் மத்திய அரசு அனுப்பும் பணம் புதிய மாவட்டங்களுக்கு செல்லாது. இது போன்ற சட்ட சிக்கலுடன் தேர்தல் நடந்த முயற்சிக்கின்றனர். இது தவறு என்பதால் நீதிமன்றத்தை திமுக நாடி உள்ளது. தேர்தல் நடத்த கூடாது என்பதற்காக திமுக நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. தவறு அற்ற நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என்பது திமுகவின் நோக்கம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜெயலலிதா பற்றி சொல்ல வேண்டும் என்றால் சமூகத்தில் தன்னந்தனியாக போராடி பெண்களும் மேலே வர முடியும் என்பதற்கு எடுத்து கட்டாக இருந்தவர். மிகவும் உறுதியானவர். நல்ல அறிவாற்றல் மிக்கவர். நிறைய புத்தகங்களை படித்தவர். அவர் முதலமைச்சராக இருந்தபோது நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து உள்ளேன். பல கேள்விகளை கேட்டு உள்ளேன். பல விமர்சனங்களை வைத்து இருக்கிறேன். ஆனால் ஜெயலலிதா கோபப்படாமல் அழகாக பதில் சொல்வார். நான் அரசியல் ரீதியாக பேசுவேன். அவரும் அரசியல் ரீதியாக பதில் சொல்வார். எல்லா திறமைகளும் கொண்ட ஜெயலலிதா வாழ கற்றுக் கொள்ளவில்லை. அது தான் அவரது வாழ்க்கையில் உள்ள சோகம். மிக சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம்
ஆனால் யாரும் இல்லாததால் கடைசி காலத்தில் வருந்துவதற்குரியதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.