ETV Bharat / city

சித்தா, ஆயுர்வேதா, யுனானி,ஓமியோபதி படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

author img

By

Published : Sep 20, 2022, 5:08 PM IST

இந்திய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, ஆகியவற்றில் சேர்வதற்கு நாளை முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கைக்குழுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி,ஓமியோபதி படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
சித்தா, ஆயுர்வேதா, யுனானி,ஓமியோபதி படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்திய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, முதுகலையில் எம்.டி. யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுஷ் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, நர்சிங் தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு நாளை முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மலர்விழி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,

''2022-23ஆம் கல்வியாண்டில் எம்.டி. யோகா மற்றும் இயற்கை மருத்துவம், மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி, பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங் தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவப்பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புகளில் நீட் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல்முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் 280 இடங்களும், சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 1,164 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

மேலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி படிப்பிற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இயற்கை மருத்துவம், யோகா படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் அளித்த பேட்டி

கரோனா தொற்றுக்குப் பின்னர் சித்தமருத்துவத்தின் மகத்துவம் அதிகரித்துள்ளது. சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் கசாயங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவத்தைப் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் சிறப்பாக இருக்கிறது'', எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: இதுவரை கால்நடை மருத்துவக்கல்லூரியில் சேர 9,335 பேர் விண்ணப்பம்

சென்னை: இந்திய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, முதுகலையில் எம்.டி. யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுஷ் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, நர்சிங் தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு நாளை முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மலர்விழி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,

''2022-23ஆம் கல்வியாண்டில் எம்.டி. யோகா மற்றும் இயற்கை மருத்துவம், மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி, பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங் தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவப்பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புகளில் நீட் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல்முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் 280 இடங்களும், சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 1,164 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

மேலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி படிப்பிற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இயற்கை மருத்துவம், யோகா படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் அளித்த பேட்டி

கரோனா தொற்றுக்குப் பின்னர் சித்தமருத்துவத்தின் மகத்துவம் அதிகரித்துள்ளது. சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் கசாயங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவத்தைப் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் சிறப்பாக இருக்கிறது'', எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: இதுவரை கால்நடை மருத்துவக்கல்லூரியில் சேர 9,335 பேர் விண்ணப்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.