ETV Bharat / city

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு கலைப்பு! - சென்னை உயர்நீதிமன்றம்

chennai hc
author img

By

Published : Jun 4, 2019, 11:23 AM IST

Updated : Jun 4, 2019, 1:28 PM IST

2019-06-04 11:15:38

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கோயில் சிலைகள், கோயில் நகைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு 2018 ஜூலையில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நியமித்த அறிவிப்பாணை மாற்றியமைத்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், இனி வரும் காலங்களில் சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை பொது நல மனுக்களை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் எனவும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

2019-06-04 11:15:38

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கோயில் சிலைகள், கோயில் நகைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு 2018 ஜூலையில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நியமித்த அறிவிப்பாணை மாற்றியமைத்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், இனி வரும் காலங்களில் சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை பொது நல மனுக்களை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் எனவும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Intro:Body:

silai kadaththal


Conclusion:
Last Updated : Jun 4, 2019, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.