ETV Bharat / city

மேகதாது அணைக்கு அனுமதி கூடாது - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

author img

By

Published : Sep 22, 2020, 2:55 PM IST

சென்னை: மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமானப் பணிக்கோ, கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என பிரதமருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார் கடிதம் எழுதியுள்ளார்.

letter
letter

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கர்நாடக முதலமைச்சர் தங்களைச் சந்தித்தபோது, மேகதாது அணை உள்ளிட்ட நீர்ப்பாசனத்திட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியிருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. மேகதாது அணைத் திட்டமானது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை முற்றிலும் மீறுவதாகும். மேலும், இத்திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என சட்டப்பேரவையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

குடிநீர்த் திட்டம் என்ற போர்வையில் முன்மொழியப்படும் மேகதாது அணைத் திட்டம், காவிரியின் தாழ்வான வடிநிலப் பகுதியாக உள்ள தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதில், எப்போதுமே சரி செய்யவோ, மாற்றியமைக்கவோ முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பல லட்சம் மக்களின் தேவையை நிறைவு செய்யும் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் இது அச்சுறுத்தலாக உள்ளது. முக்கியமாக, அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இது கடுமையாக பாதிக்கும்.

எனவே, தமிழக விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமானப் பணிக்கோ, கர்நாடக முதலமைச்சர் கோரியபடி ஒப்புதல் வழங்கக் கூடாது " எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலினின் இக்கடிதத்தை வழங்கினர்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கர்நாடக முதலமைச்சர் தங்களைச் சந்தித்தபோது, மேகதாது அணை உள்ளிட்ட நீர்ப்பாசனத்திட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியிருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. மேகதாது அணைத் திட்டமானது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை முற்றிலும் மீறுவதாகும். மேலும், இத்திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என சட்டப்பேரவையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

குடிநீர்த் திட்டம் என்ற போர்வையில் முன்மொழியப்படும் மேகதாது அணைத் திட்டம், காவிரியின் தாழ்வான வடிநிலப் பகுதியாக உள்ள தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதில், எப்போதுமே சரி செய்யவோ, மாற்றியமைக்கவோ முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பல லட்சம் மக்களின் தேவையை நிறைவு செய்யும் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் இது அச்சுறுத்தலாக உள்ளது. முக்கியமாக, அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இது கடுமையாக பாதிக்கும்.

எனவே, தமிழக விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமானப் பணிக்கோ, கர்நாடக முதலமைச்சர் கோரியபடி ஒப்புதல் வழங்கக் கூடாது " எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலினின் இக்கடிதத்தை வழங்கினர்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.