ETV Bharat / city

சென்னையில் ரூ.4.43 கோடி மதிப்புள்ள வைர, ரத்தின கற்கள் பறிமுதல்

author img

By

Published : Mar 12, 2022, 6:19 AM IST

இலங்கையிலிருந்து சென்னைக்கு பாா்சலில் கடத்திவரப்பட்ட ரூ.4.43 கோடி மதிப்புள்ள வைர, ரத்தின கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுங்கத்துறை நடவடிக்கை
சுங்கத்துறை நடவடிக்கை

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்த பாா்சலில் உயர் ரக வைர, ரத்தின கற்கள் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்களும் இல்லை. இதன்காரணமாக சுங்கத்துறை அலுவலர்கள், அவற்றை பறிமுதல் செய்து, இந்த பாா்சலை இறக்குமதி செய்த தொழில் அதிபருடைய வங்கிக் கணக்கையும், அதிலிருந்த ரூ.60 லட்சம் பணத்தையும் முடக்கினா்.

கைப்பற்றப்பட்ட 204 காரட் வைரக்கல்
கைப்பற்றப்பட்ட 204 காரட் வைரக்கல்

இதுகுறித்து அலுவலர்கள் தெரிவிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட 204 காரட் வைர, ரத்தின கற்களிள் மதிப்பு ரூ.4.43 கோடியாகும். இந்த பார்சல் தொடர்பான முகவரியை வைத்து, சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு நேரில் சென்று சோதனையில் ஈடுபட்டோம். அப்போது, ரூ.56 ஆயிரம் பணம் மற்றும் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்த பாா்சலில் உயர் ரக வைர, ரத்தின கற்கள் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்களும் இல்லை. இதன்காரணமாக சுங்கத்துறை அலுவலர்கள், அவற்றை பறிமுதல் செய்து, இந்த பாா்சலை இறக்குமதி செய்த தொழில் அதிபருடைய வங்கிக் கணக்கையும், அதிலிருந்த ரூ.60 லட்சம் பணத்தையும் முடக்கினா்.

கைப்பற்றப்பட்ட 204 காரட் வைரக்கல்
கைப்பற்றப்பட்ட 204 காரட் வைரக்கல்

இதுகுறித்து அலுவலர்கள் தெரிவிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட 204 காரட் வைர, ரத்தின கற்களிள் மதிப்பு ரூ.4.43 கோடியாகும். இந்த பார்சல் தொடர்பான முகவரியை வைத்து, சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு நேரில் சென்று சோதனையில் ஈடுபட்டோம். அப்போது, ரூ.56 ஆயிரம் பணம் மற்றும் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.