ETV Bharat / city

தமிழ்நாட்டில்  பள்ளிகள் மூடல்

author img

By

Published : Sep 19, 2021, 4:13 PM IST

Updated : Sep 21, 2021, 7:54 PM IST

தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நவம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியாகிய நிலையில் ஆங்காங்கே பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன.

Tamil Nadu
Tamil Nadu

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செப்.14ஆம் தேதி செய்தியாளர்களிடம் "தமிழ்நாடு முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அடுத்த கட்டமாக பள்ளிகளைத் திறக்கலாம் என்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலிடம் சமர்பிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.

அதோபோல முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிஉள்ளது. ஏற்கனவே பள்ளி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படுவது மாணவர்கள், பெற்றோர்களிடையே சற்று தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கேரளாவில் வரும் நவம்பர் மாதம் முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனிடையே கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செப்.14ஆம் தேதி செய்தியாளர்களிடம் "தமிழ்நாடு முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அடுத்த கட்டமாக பள்ளிகளைத் திறக்கலாம் என்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலிடம் சமர்பிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.

அதோபோல முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிஉள்ளது. ஏற்கனவே பள்ளி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படுவது மாணவர்கள், பெற்றோர்களிடையே சற்று தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கேரளாவில் வரும் நவம்பர் மாதம் முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனிடையே கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்

Last Updated : Sep 21, 2021, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.