ETV Bharat / city

1.8 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.108.00 கோடி நிவாரண நிதி - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Nov 2, 2021, 12:20 PM IST

தமிழ்நாடு அரசு ரூ. 6,000 வீதம் 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.108.00 கோடி நிவாரண நிதி வழங்க அரசாணைப் பிறப்பித்துள்ளது.

ரூ.108.00 கோடி நிவாரண நிதி வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது
தமிழ்நாடு அரசு, 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு

சென்னை: மீன்பிடி குறைவு காலங்களில் மீனவர்களைத் துயரிலிருந்து காக்கும் விதமாக, சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 6,000 வீதம் மொத்தம் ரூ.108.00 கோடி நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ரூ. 5,000 லிருந்து ரூ. 6,000 ஆக உயர்வு

அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "தமிழ்நாடு அரசு மீன்பிடி குறைவு கால நிவாரணத்தொகையாக மீனவ குடும்பம் ஒன்றிற்கு ரூ. 5000 வீதம் வழங்கி வருகின்றது. மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையை ரூ. 5,000 லிருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றிடும் வகையில் நடப்பு ஆண்டிலிருந்து (2021-22) மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை, குடும்பம் ஒன்றிற்கு ரூ. 5,000 லிருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 6000 வீதம் மொத்தம் ரூ.108.00 கோடி மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

வங்கிக் கணக்கில் நிவாரணம்

முதற்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக மொத்தம் ரூ. 74.40 கோடி தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2.10 லட்சம் மீனவர்களுக்கு, அவர்கள் செலுத்திய சந்தா பங்குத் தொகை ரூ.1,500 உடன் அரசு நிவாரணத் தொகை, ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.3,000 என்ற வகையில் மொத்தம் ரூ.4,500 வீதம் நிவாரணத் தொகையாக மீனவர்களுக்கு வழங்கப்படும். இதற்கென அரசின் பங்குத் தொகையாக ரூ.63.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகைகள் குறைவு காலமாக அனுசரிக்கப்படும் ஜனவரி 2022 மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை - இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: மீன்பிடி குறைவு காலங்களில் மீனவர்களைத் துயரிலிருந்து காக்கும் விதமாக, சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 6,000 வீதம் மொத்தம் ரூ.108.00 கோடி நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ரூ. 5,000 லிருந்து ரூ. 6,000 ஆக உயர்வு

அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "தமிழ்நாடு அரசு மீன்பிடி குறைவு கால நிவாரணத்தொகையாக மீனவ குடும்பம் ஒன்றிற்கு ரூ. 5000 வீதம் வழங்கி வருகின்றது. மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையை ரூ. 5,000 லிருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றிடும் வகையில் நடப்பு ஆண்டிலிருந்து (2021-22) மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை, குடும்பம் ஒன்றிற்கு ரூ. 5,000 லிருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 6000 வீதம் மொத்தம் ரூ.108.00 கோடி மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

வங்கிக் கணக்கில் நிவாரணம்

முதற்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக மொத்தம் ரூ. 74.40 கோடி தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2.10 லட்சம் மீனவர்களுக்கு, அவர்கள் செலுத்திய சந்தா பங்குத் தொகை ரூ.1,500 உடன் அரசு நிவாரணத் தொகை, ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.3,000 என்ற வகையில் மொத்தம் ரூ.4,500 வீதம் நிவாரணத் தொகையாக மீனவர்களுக்கு வழங்கப்படும். இதற்கென அரசின் பங்குத் தொகையாக ரூ.63.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகைகள் குறைவு காலமாக அனுசரிக்கப்படும் ஜனவரி 2022 மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை - இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.