ETV Bharat / city

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: தம்பதிக்கு வலைவீச்சு

திருவள்ளூர்: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி வரை சுருட்டிய பலே தம்பதியினரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

author img

By

Published : Nov 1, 2019, 11:47 PM IST

Rs 2 crore fraud on Diwali Fund

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்- சாந்தி தம்பதி. இவர்கள் அப்பகுதி சுற்றுவட்டார மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். நபர் ஒருவருக்கு மாதம் ரூ.200, ரூ.300, ரூ.500, ரூ.10,000 என 12 மாதங்கள் வரை வசூலித்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகையின்போது தங்க நகை, பட்டாசு இனிப்பு வழங்குவதாக கூறி சுமார் 300 பேரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

அவர்களிடம் பணம் கட்டியவர்கள் தீபாவளி பண்டிகை வரை காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காததால் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்களது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அங்கு காவலர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று புகார் அளிக்குமாறு கூறினார்கள்.

அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். பின்னர் சோழவரம் காவல் நிலையத்திலும் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி


தங்களிடம் பணத்தை வசூலித்து திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய தம்பதியினரை கைது செய்து, அவர்களிடம் இருக்கும் தங்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: காற்றாலை மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை! - ஒரு மணி நேரத்தில் பிணை பெற்ற சரிதா நாயர்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்- சாந்தி தம்பதி. இவர்கள் அப்பகுதி சுற்றுவட்டார மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். நபர் ஒருவருக்கு மாதம் ரூ.200, ரூ.300, ரூ.500, ரூ.10,000 என 12 மாதங்கள் வரை வசூலித்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகையின்போது தங்க நகை, பட்டாசு இனிப்பு வழங்குவதாக கூறி சுமார் 300 பேரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

அவர்களிடம் பணம் கட்டியவர்கள் தீபாவளி பண்டிகை வரை காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காததால் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்களது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அங்கு காவலர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று புகார் அளிக்குமாறு கூறினார்கள்.

அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். பின்னர் சோழவரம் காவல் நிலையத்திலும் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி


தங்களிடம் பணத்தை வசூலித்து திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய தம்பதியினரை கைது செய்து, அவர்களிடம் இருக்கும் தங்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: காற்றாலை மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை! - ஒரு மணி நேரத்தில் பிணை பெற்ற சரிதா நாயர்

Intro:செங்குன்றம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி என புகார் தலைமறைவான தம்பதியை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் முறையீடு.


Body:திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. காந்தி நகரைச் சேர்ந்த ஆனந்த் சாந்தி தம்பதியினர் சுற்றுவட்டார இடங்களை சேர்ந்த மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். நபர் ஒருவருக்கு மாதம் 200 300 500 முதல் பத்தாயிரம் வரை 12 மாதங்கள் வசூலித்து தீபாவளி பண்டிகையின்போது தங்க நகை பட்டாசு இனிப்பு வழங்குவதாக கூறி சுமார் 300 பேரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இவர்களிடம் பணம் கட்டியவர்கள் தீபாவளி பண்டிகை வரை காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காததால் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு தலைமறைவாகி அவர்களது செல்போன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு அது தங்களது எல்லை கிடையாது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று அளிக்குமாறு கூறியதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு சோழவரம் காவல் நிலையம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர் பெயரில் சோழவரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். தங்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் தலைமறைவான தம்பதியரை கண்டுபிடித்து அவனிடமிருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.