ETV Bharat / city

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசுக் கல்லூரி கட்டணம், அரசாணை பிறப்பிக்க கோரிக்கை

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு அரசுக் கல்லூரி கட்டணம், உடனே அரசாணை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Feb 12, 2022, 6:14 PM IST

தனியார் மருத்துவக் கல்லூரி
தனியார் மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சேரும் மாணவர்களில் 50 விழுக்காட்டினருக்கு அரசுக் கல்லூரிகளின் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்லூரிகளில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டக் கூடாது. இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரம் 2019ஆம் ஆண்டின் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் 10(1)(ஐ) பிரிவின்கீழ் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஏழை மாணவர்கள் சேர முடியாத நிலை

அதன்படி, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் கட்டணம் குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் அமைத்த வல்லுநர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் 50 விழுக்காடு இடங்களுக்கு அந்த மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ ஆணையம் ஆணையிட்டுள்ளது.

அரசுக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக்கட்டணம் வசூலிக்கப்படவுள்ள 50 விழுக்காடு இடங்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் மருத்துவ ஆணையம் வழிகாட்டியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 விழுக்காடு அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கும்பட்சத்தில், அதில் முதல் 50 விழுக்காடு இடங்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும்.

ஒருவேளை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட்டு, மீதமுள்ள கட்டணச் சலுகை இடங்கள், மற்ற மாணவர்களில் தகுதி அடிப்படையில் முன்னணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அவற்றில் ஏழை மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்தது.

எல்.கே.ஜி.க்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறைவு!

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.85 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.13,610 மட்டுமே. இது தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட குறைவாகும்.

தனியார் கல்லூரிகளில் 50 விழுக்காடு முதல் 65 விழுக்காடு இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் தனியார் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் ஏழை மாணவர்களால் சேர முடியவில்லை.

இனி தனியார் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு அரசுக் கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் ஏழை & நடுத்தர மாணவர்களும் எளிதாக மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணய வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் கட்டண நிர்ணய அதிகாரம், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட கட்டண நிர்ணயக் குழுவுக்குத்தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களும் இந்தக் கட்டண நிர்ணயக் குழுக்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளன.

அரசு கட்டணத்தை யார் நிர்ணயிப்பது?

தமிழ்நாட்டில் முதற்கட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்றுடன் (பிப்ரவரி 11) முடிவடைந்துவிட்ட நிலையில், கல்லூரி ஒதுக்கீட்டுப் பட்டியல் வரும் 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் அதிக அளவில் ஒதுக்கப்படும் இரண்டாம்கட்ட கலந்தாய்வும் அடுத்த சில வாரங்களில் நிறைவடைந்துவிடும்.

அதற்குள்ளாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு ரூ.13,610 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையைத் தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இந்தக் கட்டண விகிதம் நடைமுறைப்படுத்தப்படுவதுதான் மிகவும் அவசியமானதாகும்.

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக் கட்டணமாக ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வசூலிக்கப்படும் நிலையில், 50 விழுக்காடு இடங்களுக்கு ரூ.13,610 மட்டும் வசூலிக்கப்பட்டால், அது ஏழை மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

ஆனால், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, அவற்றின் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வையும் மத்திய அரசுதான் நடத்துகிறது, கட்டணத்தையும் மத்திய அரசே நிர்ணயிக்கிறது.

இத்தகைய சூழலில், அவற்றில் உள்ள 50 விழுக்காடு இடங்களுக்கு அரசு கட்டணத்தை யார் நிர்ணயிப்பது? என்ற வினா எழுகிறது. மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு பேசி தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 விழுக்காடு இடங்களுக்கான கட்டணம் குறித்த தெளிவான ஆணைகளையும் உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நர்சரி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சேரும் மாணவர்களில் 50 விழுக்காட்டினருக்கு அரசுக் கல்லூரிகளின் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்லூரிகளில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டக் கூடாது. இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரம் 2019ஆம் ஆண்டின் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் 10(1)(ஐ) பிரிவின்கீழ் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஏழை மாணவர்கள் சேர முடியாத நிலை

அதன்படி, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் கட்டணம் குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் அமைத்த வல்லுநர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் 50 விழுக்காடு இடங்களுக்கு அந்த மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ ஆணையம் ஆணையிட்டுள்ளது.

அரசுக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக்கட்டணம் வசூலிக்கப்படவுள்ள 50 விழுக்காடு இடங்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் மருத்துவ ஆணையம் வழிகாட்டியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 விழுக்காடு அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கும்பட்சத்தில், அதில் முதல் 50 விழுக்காடு இடங்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும்.

ஒருவேளை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட்டு, மீதமுள்ள கட்டணச் சலுகை இடங்கள், மற்ற மாணவர்களில் தகுதி அடிப்படையில் முன்னணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அவற்றில் ஏழை மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்தது.

எல்.கே.ஜி.க்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறைவு!

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.85 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.13,610 மட்டுமே. இது தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட குறைவாகும்.

தனியார் கல்லூரிகளில் 50 விழுக்காடு முதல் 65 விழுக்காடு இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் தனியார் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் ஏழை மாணவர்களால் சேர முடியவில்லை.

இனி தனியார் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு அரசுக் கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் ஏழை & நடுத்தர மாணவர்களும் எளிதாக மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணய வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் கட்டண நிர்ணய அதிகாரம், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட கட்டண நிர்ணயக் குழுவுக்குத்தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களும் இந்தக் கட்டண நிர்ணயக் குழுக்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளன.

அரசு கட்டணத்தை யார் நிர்ணயிப்பது?

தமிழ்நாட்டில் முதற்கட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்றுடன் (பிப்ரவரி 11) முடிவடைந்துவிட்ட நிலையில், கல்லூரி ஒதுக்கீட்டுப் பட்டியல் வரும் 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் அதிக அளவில் ஒதுக்கப்படும் இரண்டாம்கட்ட கலந்தாய்வும் அடுத்த சில வாரங்களில் நிறைவடைந்துவிடும்.

அதற்குள்ளாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு ரூ.13,610 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையைத் தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இந்தக் கட்டண விகிதம் நடைமுறைப்படுத்தப்படுவதுதான் மிகவும் அவசியமானதாகும்.

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக் கட்டணமாக ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வசூலிக்கப்படும் நிலையில், 50 விழுக்காடு இடங்களுக்கு ரூ.13,610 மட்டும் வசூலிக்கப்பட்டால், அது ஏழை மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

ஆனால், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, அவற்றின் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வையும் மத்திய அரசுதான் நடத்துகிறது, கட்டணத்தையும் மத்திய அரசே நிர்ணயிக்கிறது.

இத்தகைய சூழலில், அவற்றில் உள்ள 50 விழுக்காடு இடங்களுக்கு அரசு கட்டணத்தை யார் நிர்ணயிப்பது? என்ற வினா எழுகிறது. மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு பேசி தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 விழுக்காடு இடங்களுக்கான கட்டணம் குறித்த தெளிவான ஆணைகளையும் உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நர்சரி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.